Showing posts with label நவீன கவிதை. Show all posts
Showing posts with label நவீன கவிதை. Show all posts

Tuesday, 16 October 2012

நவீன கவிதையைப் புரிந்து கொள்ள.




நவீன கவிதையில் ஒழுங்கற்ற வாக்கிய அமைப்புகளின் மூலமாக சேதி சொல்லும் கவிஞர்களை நாம் கண்டுணர்வோம். தற்சமயம் அவர்களின் கவிதைகளில் தெரியும் மைய இழையின் புதிர்ப்பாதையை அவிழ்க்கலாம் வாசகர்களே. கவிதைக்கான கச்சாப் பொருட்களாக கவிதை இயங்கும் தளத்தை சற்று குறுக்காக வெட்டிப் பார்க்கலாம்.

முதலில்:
நவீன கவிதை தன் ஆரம்பவரியிலிருந்து இயக்கும் பொருட்களாக இவைகளே உள்ளது.கவிதையின் உள்ளார்ந்த அனுபவம் எழுதும் மனநிலைக்குச் சொந்தக்காரரானான ஒரு மனிதரின் மூளையிலிருந்தே பிறக்கிறது. தனிமனிதர் என இங்கு எவருமில்லையாதாலால் கவிதை பொதுவாகவே சமூகத்தன்மை கொண்டதாக இருக்கிறது..

கவிதையின் பாடுபொருளையும் அதன் உத்தியையும் பொறுத்து நவீன கவிதையின் ஏழு கோணங்கள் அல்லது கோணல்கள்.

1 வக்கிரம், இருண்மை, படிமம்

2 முழக்கம், அரசியல், ஆரவாரம்,

3 சமூகவுணர்வு, விமர்சனம், சமூக மாற்றம்

4 தனிமனிதக் கழிவிரக்கம், நம்பிக்கை வறட்சி, அந்நியமாதல்

4 மிதப்பு, நழுவல். எதிலும் ஒட்டாப்பண்பு

6 பாசாங்கு அறியாமை, வெகுளித்தனம்

7 தன்முனைப்பு அகங்காரம் அலட்சியம்


கவிதையின் மொழித்தளம் என்பதைப் பொறுத்த அளவில்  கவிதைப் பரப்பில் விளையாடும் சதிர்கள்

1. சொற்களைச் செதுக்குதல், வடமொழிச் சொற்களை வலியத்திணித்தல்.

2 .வரிகளை அடுக்குவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும்
   வித்தியாசங்கள்,  கவனமும் கவனமின்மையும்.

3 . விடுகதைப்பாணி, திடீர்ச்சுழற்சி,

4 . படிமங்கள், உருவகங்கள், தொன்மங்க.ள்

5. உரைநடையின் நேரடித்தாக்கம்.

6 சந்தம், நாட்டுப்புற பாடலின் சாயல்.


இதுவே நவீனம் எனச் சொல்லி கவிதைகள் தன் வார்த்தைகளுக்குள் ஒளித்துவைத்துள்ள உணர்ச்சிகள். இவைகளை வைத்து கோலி விளையாடும் கவிதைகளை நாம் உணரமுடியும்.  இவைகள் குறித்து வாசகர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

பிள்ளைப் பாசம்,
தாய்ப்பாசம்,
இயற்கையை வருணித்தல் என இன்னும் சில சுமைத்தாங்கிக் கவிதைகளையும் கவிஞர்கள் ஆற்றிவருகிறார்கள். விலை போனவைகள், விற்பவைகள் என நிறைய கவிஞர்கள் எழுதியும் வருகிறார்கள். கவிதையின் தன்மைகள் குறித்து வாசகர்கள் சற்றே உரத்த சிந்தனையோடு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிட்டுள்ள உணர்ச்சிமையங்களைத் தாண்டி ஒரு கவிதை இயங்குமாயின் அது குறித்து  நாம் சற்று கவனமாகப் பேசுவோம் கண்மணிகளே.

சிந்திப்போம் கண்மணிகளே….