Showing posts with label அய்யப்பமாதவன். Show all posts
Showing posts with label அய்யப்பமாதவன். Show all posts

Thursday, 25 October 2012

ஆம்பளைப் பயல் அய்யப்ப மாதவனுக்கு.





தீர்த்த முனி என்கிற கோழையை எத்தனைபேர் உங்கள் நட்பு உறவில் முறித்திருக்கிறீர்கள். வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் போலியான பெயர்களைக்கொண்டு வளர்ச்சிக்குத் தடைபோட முயல்கின்றனர். யாவரும்.காமின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தீர்த்தமுனியென்பவன் விரைவில் பிடிபடுவான். அவன் முகத்திரை கிழியும் காலம் நெருங்கிவிட்டது.


- அய்யப்ப மாதவன்


அய்யா அய்யப்பமாதவரே.
ஒருவரும் நீக்கவில்லை என்றதும் ஏனய்யா இப்படிப் புலம்பித் தள்ளுகிறீர்கள். எனக்கு வாய்த்த நண்பர்கள், நல்வரவுகள் அப்படி. உங்களைப் போல ஒரு மூன்றாந்தரத்திலும் கேடுகெடுட்ட நான்காம்தரமாய் இருப்பதை விட கோழையாய் இருப்பது மாபெரும் வரமய்யா.. உங்கள் பிரச்சினை புரிகிறது மாதவரய்யா. உங்கள் கவிதையை நான் பொருட்படுத்தவில்லை என்பதுதானே.


காக்கா, தவளை
நான் அமைதியாய் இருக்கிறேன்
பொழுது விடிந்துவிட்டது.

நான் கத்திக்கொண்டிருக்கிறேன்
காக்காய் அமைதியாகி விட்டது

டக்கால்டி
டிக்கால்டி...

இதே பாணியில் தினமும் உளறி..ச்ச்ச்ச்ச் பாவமய்யா நீங்கள் பரிதாபமாக இருக்கிறது. அந்தோ பரிதாபம்.என் வாழ்வில் காணா பரிதாபம்.

நீங்கள் கவிஞர் என நம்பி காரியம் ஆற்ற நினைப்பது எதனால்.

அய்யா ஆம்பளைப் பயலாரே.. பெண்களிடம் எளிதாக சுகம் கிடைபவன், பெட்டைப் பயல் என்று நீங்கள் சொன்னதிலிருந்து உங்களது முகமூடியல்ல முகமே கிழிந்து பல நாட்களாயிற்று. நீங்கள் பெண்களையும், கட்டிய மனைவியையும் எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள், திருநங்கைகளை எவ்வளவு கேவலமாக எண்ணுகிறீர்கள் என்பது புலப்பட்டு விட்டது.இவ்வாறு இழித்துப் பேசி தராதரம் இன்றி நடந்த உங்களை தடை செய்யாமல் நண்பர்கள் இருக்கும் காரணம் நீங்கள் கவிஞர் என்பதால் இல்லை. உங்கள் மேல் அவர்கள் பரிதாபப்படுவதுதான். அது உங்களுக்குப் புரியவில்லையா அய்யா.அவர்களிடமே கேளுங்கள் அய்யா.


தவளை போல் தாவமட்டும் அல்ல...தவளை போல் கூச்சலும் இடுவது எதற்கய்யா...இப்பொழுது கேட்கிறேன்...உமது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனைவியிடம் எளிதாக சுகம் கிடைப்பவர்களா...அப்படிக் கிடைத்ததனால்தான் உம்மை கவிஞர் எனக் கூறுகிறார்களா..அப்படிக் கூறினால் அந்த ஆம்பளைச் சிங்கங்கள் பெயர்கள் எல்லாம் வாழ்கவய்யா...நான் பெட்டைப்பயலாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு மகிழ்ச்சிதான் அய்யா.

அய்யா யாவரும் காம் என்றால் என்ன.  யாவரும் ஆம்பளைப் பயல்கள், மனைவியிடம் எளிதாக சுகம் கிடைத்தவர்களா அய்யா.


அய்யா வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறீர்களே அய்யா...உங்களுக்கு எதய்யா வளர்ந்திருக்கிறது.மோசமய்யா மோசம்.வேஷமய்யா வேஷம்

ஏதாவது ஒரு வேஷத்தைப் போடுங்கள் மிஸ்டர். பல வேஷம்.

அய்யா எனது நட்புப் பட்டியலிலிருந்து விலகியவர்கள் சுதீர் செந்தீல் என்பவர். அவரும் என்னை தடை செய்யவில்லை. பட்டியலில்தான் இருக்கிறார். பிறகு மனோமோகன் என்பவரைக் காணவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் யம்மாடி ஆத்தாடி என மூச்சிரைக்க ஓடிய ஓட்டத்தை தொடங்கி வைத்தது அய்யப்ப மாதவன். இரண்டாவது ஆத்தா மார்த்தி. உங்களை நான் பொருட்படுத்தவேயில்லை. யார் சொன்னார்களோ உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பெட்டைப்பயல் என்றீர்கள், அதற்கு பதில் கொடுத்து விட்டேன். அடுத்து ஆத்தா மார்த்தி. பாவம். ப்ச்....

அய்யா நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நாம் கவிதை குறித்து விவாதிப்போம். நான் தயாராக இருக்கிறேன். சும்மா ஒளிந்துகொண்டு.மொள்ளமாறி, பெட்டைப்பயல் என உளறி வைக்காதீர்கள். உங்களுக்கு கவிதை மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாம் விவாதிக்கலாம். தயாராகத்தான் இருக்கிறேன். இல்லை இதுவரை நான் செய்த விமர்சங்களில் பிழை இருக்கிறது, அது சரியில்லை இது தவறு  எனச் சுட்டிக்காட்டுங்கள். அதையும் பேசலாம், பிளாக் செய்துவிட்டு மறைந்து இருந்து உளறுவது. மிக மோசமய்யா.


ஆத்தா மார்த்தி சொல்லி, நீங்கள் ஹேக் செய்யுங்கள் எனக் கெஞ்சி நண்பர்களிடம் காரியம் சாதிக்க நினைப்பது வருத்தமய்யா.அவர் என்னை பிளாக் செய்ய அவரது நண்பர்களை மிரட்டிப் பார்த்தார்.ம்ஹீம்.எதுவும் நடக்கவில்லை.இப்பொழுது நீங்கள் கேக் செய்யுங்கள், வடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் என்கிறீர்கள்.என்னை தடை செய்யும் அளவுக்கு நான் செய்த மாபாதகம் எதுவெனச் சொன்னால் நான் புரிந்துகொள்வேன் அய்யா.

உண்மையிலேயே நீங்கள் கவிஞர்களை மதிப்பவராக இருந்தால், நாம் கவிதை குறித்துப் பேசலாம். ஆனால்  நீங்கள் உளறுபவராக இருந்தால். அய்யா நீங்கள் விமர்சித்த கவிதைகளில் ஒன்றை எடுத்துப் போடுங்கள். அய்யா ஆம்பளைச் சிங்கமாய் நீங்கள் இருப்பது எதில் அய்யா.திட்டுவதில் மட்டுமா.


அன்பர்
அடியேன் 

- தீர்த்தமுனி

Saturday, 6 October 2012

புலம்பல் பிராணி அய்யப்ப மாதவனுக்கு...





// தீர்த்த முனி என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தமிழ் இலக்கியவாதிகளை கிண்டல் செய்யும் நாதாரியின் உண்மையான முகத்தை விரைவில் கிழித்தெறிவோம். உண்மையில் துணிபு இருந்தால் உண்மையான பெயரில் வந்து விமர்சனம் செய் பெட்டை பையலே... இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே... நேரே பார்த்தால் உன்னை எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்.//

- அய்யப்ப மாதவன்

அய்யா அய்யப்ப மாதவனாருக்கு. எல்லாவற்றையும் பப்பளக்கா என திறந்து போட்டு எந்நேரமும் உண்மைச் சொரூபத்தை முகநூல் வழியாக வாரி வழங்குபவரே. உங்களுக்கு என் வணக்கம். உங்களின் உண்மையான முகம் கிழிந்து தொங்கி நாற் நாறாகி காலம் பலவாயிற்று. உண்மையில் முகத்தைப் போட்டும் எந்த விமர்சனத்தையும் இதுவரை துணிவோடு எழுதாத நீர் எனக்கு யோசனை சொல்வது. ஏதோ கிடைத்து எதற்கோ குரைப்பதைப் போல் உள்ளது. உங்களுக்கு தெம்பு வந்து, உண்மையான முக லட்சணத்தோடு  இதுவரை நீங்கள் தமிழ் இலக்கியத்தில் கிழித்துக்கட்டிய தோரணங்களைக் காட்டுங்களேன்.

இது உங்களது அகந்தைக்கு…

பெட்டை,
மனைவியிடம் எளிதாக கிடைக்கும் சுகம்…

அய்யா பெட்டை என்றால் என்னவென்று தெரியுமா இதன் முலம்  திருநங்கைகளை நீங்கள் எவ்வளவு அறுவெறுப்போடு பார்க்கிறீர்கள் என உங்களின் அடிமன ஆழம் காட்டிக்கொடுத்துவிட்டது. நான் சொன்ன சொல்லில் மாறாமல் உங்களைப் போல் புழுக்கள்…இன்னும் கவிதையில் நான் மரத்தை நேசிப்பவன், மட்டை, குளம் குட்டைகளை நேசிப்பவன் ஆனால் சக மனிதனின் மண்டையைப் பொளப்பேன் என்பதுதானய்யா உங்களது இலக்கிய நாட்டம். கழிசடை வார்த்தைகளை உள்ளே எச்சீயூறி வைத்துக்கொண்டு, முகநூலில் உத்தம கோமணத்தை வரிந்து கட்டி. நான் உத்தமபுத்திரன் என உளறுவது நான் கண்டுவந்தது தானய்யா. உமது கேவலமான புத்தி உமது ஆத்திரத்தின் வழியாக அதன் சொரூபத்தைக் காட்டிவிட்டது. நான் செய்தது நாலு கவிதைகளை எடுத்து இயம்பியது. நீங்கள் செய்தது….கேவலமய்யா கேவலம்.

அய்யா திருநங்கைகளைக் கேலி செய்யும் உங்கள் பொது புத்தியை நான் புரிந்துகொள்கிறேன். இது உங்களைப் போல மூன்றாந்தர கவிஞர்களுக்கு வாய்க்கும் இயல்புதான்.

எந்நேரமும் கவிதை எழுதுகிறேன் கவிதை எழுதுகிறேன்…உப்பு புளி என விற்றுத் திரியும் நீங்களும் உங்களையொத்த நண்பர்களும்…ஆஹா அற்புதம்.

அய்யா தங்களது வரிகளில் நான் மிகவும் அறுவெறுப்பாக…ச்சீ…ஒரு கேவலமான ஒரு பிறவியா என்னைப் பேசுவது என நினைத்தது இந்த வார்த்தைகளில்தான்

// இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே...//


ஏனய்யா,…நீங்களெல்லாம் காதலையும் காமத்தையும் எழுதுவதைக் கண்டால் எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறதய்யா. அய்யா தாங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தங்களது இல்லக் கிழத்தி தூக்கிக்காட்டி காமத்தை எளிதாக தந்துவிடுகிறார்களா…அய்யா நாய்களைக் கவனித்திருப்பீர்கள்.கவிஞரல்லவா…! ஐந்தறிவு சீவன் அது. அதற்கும் போட்டிகள் பொறாமைகள். சண்டை போடுவது எல்லாம் உண்டு. ஆனால் போறபோக்கில் எளிதாக கிடைக்கும் சுகம் என்று எழுதியிருக்கிறீர்கள். அய்யா புலவரே…உங்களுக்கு வாய்த்த அந்த இல்லக்கிழத்தியை நினைத்து வருந்துகிறேன். என்றைக்காவது இல்லக்கிழத்தியின் நிர்வாணத்தை கண்ணெடுத்துப் பார்த்திருந்தால் இது போல் அசிங்கங்களை நீங்கள் முன் வைத்திருக்க மாட்டீர்கள், ஆனால் இரவில் விரலால் துளை தேடி கவிதை எழுதுபவர்தானே அய்யா நீங்கள்

வணக்கம் அய்யா.


அய்யா உங்களது முகப்புத்தகத்தை முழுதாக கீழே தள்ளிப் பார்த்தேன்…அதில் அனைத்திலும் கவிஞர்களை மதிக்காத சமூகம் உருப்படப்போவதில்லை, நாசமாகப் போகவேண்டும்…மண்ணோடு மண்ணாக வேண்டும் என புலம்பியிருந்தீர்கள், உங்களைப் போன்ற அறுவெறுப்புப் பிடித்தாட்டும் ஒரு பிராணியை கவிஞர் எனச் சொல்ல முடியுமா அய்யா…

அய்யா நீங்கள் கருவறையை விட்டு வெளியே வந்ததும், விரைகளை உள்ளுக்கிழுத்து எங்கே காகிதம், எங்கே எழுதுகோல் எனக் கர்ஜித்து…

அடிப் பிண்டமே..
எளிதாய் கிட்டிய சுகத்தில் என்னை
பெற்றுப்
பேண்டவளே…

என கவிதையெழுதி அன்னையிடம் நீட்டிய கவிசிம்மம் நீர்…
வாழ்க வளமுடன் அடியேனுக்கு அந்தக் கீர்த்தி கிடைக்கவில்லை. உங்களை உங்கள் கவிதைகளை, நான் புகழவும் இல்லை, இகழவும் இல்லை. ஆனால் இதற்கு நீங்கள் அனுப்பிய வார்த்தைகள் அபாரம். இகழ்ந்தால் இதற்கு மேலே வந்திருக்கும், புகழ்ந்தால் எனக்கு நல்லதொரு விளம்பரத்தை உங்களது பக்கத்தில் தேடிக்கொடுத்திருப்பீர்கள்.

ஆனால் அய்யா…பெட்டை, மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகம் என்றெழுதிய உங்களைப்போன்ற ஒரு மூன்றாந்தரத்தை பொருட்படுத்தி விமர்சிப்பது என்னால் ஆகாத காரியம்.

வணக்கம் அய்யா.