Showing posts with label விமர்சனம்.. Show all posts
Showing posts with label விமர்சனம்.. Show all posts

Monday, 15 October 2012

முகநூல் கவிஞர்களின் சுயரூபம்.




வாசகக் கண்மணிகளே.... வந்த சில நாட்களாய் நான் எழுதியது முகநூல் கவிஞர்களின் கவிதைகளுக்கு நான்கு கவிதைகளுக்கு விமர்சனம். அடியேன் செய்தது அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் நான் வேறெதுவும் செய்யவில்லை. ஆனால் முகநூல் கவிஞரய்யாக்கள் எனக்குச் செய்தவைகள் இவைகள்.

1 வா. மணிகண்டன் கொசு என்றார்,

2 ஆத்மார்த்தி நான் தவறாக கவிதைகளைப் பார்க்கிறேன் என்றார். பதிலுக்கு இன்னும் விளக்கம் சொல்லவில்லை. அது தண்ணீருக்குள் விட்ட குசுவாகவே இருக்கிறது.

3 நிலா ரசிகரய்யாவை ஆளையே காணவில்லை

4 அய்யப்ப மாதவன் பெட்டைப் பயலே என்றார். எனது படுக்கயறைக்குள் நோட்டமும் விட்டார்.

5 வேல்கண்ணன் பிணி என்றார்.

இவர்கள் அனைவருக்கும் எனது விமர்சனக் கனிவான வணக்கம்.

என்ன கொடுமை அய்யா இது... உங்கள் கவிதைகளை விமர்சனம் செய்தால் இதுதான் பதில் விமர்சனமா....இது போதாதென்று அய்யா சிபிச்செல்வன் ஈமு கோழி, குதிரை என்று ஏதோ உளறியதோடு தீர்த்தமுனியை இந்தா நெருங்கிவிட்டேன் அந்தா நெருங்கிவிட்டேன் என்றார். அய்யா அவருக்கு பதில் வைத்தும் அது காணாமல் போய்விட்டது. இதுவெல்லாம் போதாதென்று ஏதோ வயிற்றுக்கடுப்பு வந்தவன் வெளியூர் சென்று கழிவறை தேடி அலைந்த கதையாய் எனக்கு கவிதை வந்தது என்று குமுறிக்கொண்டிருக்கிறார். நான் இவர்களை பொருட்படுத்தினேன். நாளையக் கவிக் கண்மணிகள் என எண்ணி எழுதினேன். ஆனால் அது காமெடியாகிவிட்டது. நான் யாரிடம் உரையாடியிருக்கிறேன் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது செல்லங்களே...

வாசகக்கண்மணிகளே...இதுவரை எனது முக நூல்கணக்கு இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டுவிட்டது. ஹேக் செய்வது எப்படி என எனது விமர்சனத்துக்கு பதில் சொல்லாது கம்மென்றிருக்கும் தங்கங்கள், செல்லங்கள் வைரக்குட்டிகள் அறிவார்கள்.


நான் கவிஞராக்கும் என்று கொந்தளித்துக் குமுறும் இவர்களின் அன்பு மனம் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன். அதிலும் இந்த அய்யப்ப மாதவனய்யா அவர்கள் பெட்டைப்பயல், செறுப்பென்று உளறியதோடு இப்பொழுது நான் புணர்ந்த பின் பெண்ணென்பவள் யார் என்கிற உலகத்தத்துவத்தை உச்சுக்கொட்டிச்  சொல்கிறார். பார்க்க பார்க்க பரிதாபமாக இருக்கிறது கண்மணிகளே. அவர் பக்கங்களெங்கும் கவிஞர்கள்தான் நாளைய உலகை ஆளவேண்டும் எழுதும் கரங்களே எனப் பாடலைப் பாடி மற்ற அனைவரையும் தண்டங்கருமாந்திரங்கள், நாசமாப் போய்ச் சாகட்டும் என்கிறார். அவரது அன்புக்கவியுள்ளம் கண்டு நொந்தேன் நான். நான்கு விமர்சனங்களிலேயே முகநூல் கவிஞர்களின் கொந்தளிப்புகளை சரியாக சுட்டியுள்ளேன் என நினைக்கிறேன். கீழே வாசக்கண்மணிகள் காணுவது அய்யாச் சிபிச்செல்வன் கவிதை எழுதும் தருணமாய் எழுதியதற்கான விமர்சனம்.


கவிதை எழுதுவதும் ஈமுக் கோழி வளர்ப்பும்

கவிதை எழுதும் தருணமாக அய்யா சிபிச்செல்வன் உளறியது எனக்கு ஏகக் கொண்டாட்டத்தை இனிப்புடன் வழங்கிவிட்டது. திரைப்பட பில்டப்புகளை நினைவில் கொண்டுவந்தது. அந்த பில்டப்புகளையே நான் காமெடி நடிகர்களுக்கு இசையென வழங்கும் டொய்ங் என்ற சப்தமாக மாற்றியிருக்கிறேன்.

கவிதையியல் கவிதை எழுதும் தருணம் என்ற தலைப்பில் கவிஞரென்று சொல்லிக்கொள்ளும் கவிஞரய்யா சிபிச்செல்வன் தனக்கு கவிதை வந்த அனுபவத்தை அருமையாக எழுதியிருந்தார். படித்தேன். அவரின் உரையாடல் முழுக்க தான் கவிதைதான் எழுதப்போவதாக நம்பிக்கொண்டு வீட்டுக்கு வேகமெடுத்து ஓடியுள்ளார். நல்ல வேளை தடுக்கிவிழவில்லை. கொதிநிலையில் வெடிக்க தயாராக இருக்கும் பிரஷர் குக்கர் போல அவரது உடல். மனம் ஏனைய உடல் உறுப்புகள் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது.

இது போன்ற விஸ்தீரணங்களை கவிஞரய்யா கவிதை எழுதும் தருணத்தில் அடைந்திருக்கிறார். இதை வியாக்கியானமாக அவரை எழுதத் தூண்டியது எது என்பதை ஒரு சிற்றறிவுக்கெட்டிய உளவியல் சார்ந்த கேள்வி பதில்களாக முன்வைத்துப் பார்க்கலாம்.


1 ஒரு கவிதையை எழுத இவ்வளவு அவஸ்தையா?

                          ஆம் கவிப்பொழுது சும்மாயில்லை. ஆண்டு, அகன்று செரித்து உள் நுழைந்து குமுறிவரும் கொந்தளித்து ஒருக்களித்து புரண்டு படுத்து, கோட்டுவாய் கோட்டை உடைக்கும் ஒரு பயங்கர ஆற்றல். அது எல்லோருக்கும் வந்துவிடாது, இத்தகு அவஸ்தைகளோடு எழுதினால்தான் அது கவிதை. அதுவும் அது கவிதையாகத்தான் இருக்கும் என முடிவு கட்டிவிடலாம்.

2 அப்படியென்றால் நோய் முற்றி உயிருக்குப் போராடும் நோயாளி எழுதித்தரும் மாத்திரைச் சீட்டும் கவிதைகளா?

                           ஆமாஞ்சாமி. அது கவிதையேதான் அப்புறம் என்ன சும்மாவா. அட்ய்ஹு கவிததான். ஆனால் மருந்துகளுக்கிடையில் தனிமை வெறுமை கொலுசு, மழை என்ற நாலைந்து வரிகள் இருக்கவேண்டும். இருந்தால் சாகும்போதும் கவியெழுதிய கவிச்சித்தர் என அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்து முடித்து விடலாம்.

3 கவிதை எழுத கவிஞரய்யாவுக்கு, அதன் இனந்தெரியாத மனவலி, பரபரப்பு, பிரஷர் குக்கர் கொதிநிலை, தடுமாற்றம், வருடங்களாகத் தடைபட்டிருந்த தருணம், குட்டிப் போட்ட பூனையாக அவஸ்தைப்பட்ட மனம் இதையெல்லாம் கவிதை எழுதுவதற்கு தேவையா?

                             ஆம். ஒரு கவிதை எழுதுவதும் பிள்ளை பெறுவதும் ஒன்றுதான் என கவிஞர்களே சொல்லுகிறார்கள், இத்தகைய அவஸ்தை வந்தால் ஏதேனும் ஒரு புத்தகத்தை…ஆனால் நீங்கள் பல்லாயிரக்கணக்காக வருடங்களாய் தேடும் ஒரு புத்தகமாய் இருந்தால் இன்னும் விரிவாக கவிதை வரும்..

ஒரு நபர், அவரைக் கவிஞரய்யா என்றே சொல்லலாம். அத்தைகைய ஒரு கவிஞரய்யா தனது நண்பரைத் தேடி ஒரு சிற்றூருக்கு வருகிறார். பேருந்து விரைந்துகொண்டிருக்கும்போது அவருக்கு இனம் புரிந்த ஒரு அவஸ்தை வருகிறது. பேருந்தோ மிக மெதுவாய் போய்க்கொண்டிருக்கிறது. கவிஞரய்யாவுக்கு உடல் சூடாகத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பிடித்தால் கொல்லன் காய்ச்சிய இரும்பைப் போல கொதிக்கத் தொடங்கிவிடும். சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிற்றூருக்கு செல்லும் ஒரே ஒரு பேருந்தாகையால் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது. ஒரு தொந்தி நிறைந்த வயிற்றுக்காரன் கவிஞரய்யாவின் தோளில் தனது எடையை இறக்குகிறான். ஏற்கனவே கூடியிருந்த அழுத்தம் இப்பொழுது கவிஞரய்யாவுக்கு இன்னும் கூடியது, இப்படியே இருந்தால் பிரளயம்தான் என நினைத்து அங்கும் இங்கும் பார்க்கிறார். தனது கவனத்தை பின்னோக்கிச் செலுத்துகிறார். தனது கவிதைத் தொகுதிக்கு வெளியூரில் மஞ்சள் சால்வை போர்த்தி கைதட்டிய நினைவுகள் வருகிறது. ஆனாலும் கவிஞரய்யா மனம் பதட்டத்துடன் நிகழ்காலத்திற்கு அவரை இழுத்து வருகிறது. மனம் தாளமுடியாத சுமையும் அழுத்தமும் அதிகமாகிப் போய்க்கொண்டேயிருக்க தாங்க முடியாத அவஸ்தையுடன் எழுந்து நிற்க, ஆள் எழுந்துவிட்டார் என அருகில் இருந்த முதியவர் அமர்ந்துவிட்டார். கவிஞரய்யாவோ அவஸ்தையை சற்று தள்ளிப் போடத்தான் எழுந்து நின்றார். ஆனாலும் பரவாயில்லை நிற்பது சற்று லகுவாக இருக்கிறது என நினைத்த அடுத்த விநாடியில் சகலமும் பறிபோகும் ஒரு மனநிலைக்கு கவிஞரய்யா வசமிழந்தார், கால்களை இறுக்கி கோணாலாக்கி எவ்வளவோ பொருத்தப்பாடுகளில் நின்று கொண்டிருக்க ஒரு வழியாக பேருந்து வேகத்தடையை தடையேதும் இல்லாமல் கடக்க தூக்கிப் போடப்பட்ட பேருந்துக்குள்ளிருந்த கவிஞரய்யாவுக்கு உள்ளே ஏதோ வெடித்துவிடுவதைப் போல அவஸ்தை கூடியபடியே வந்தது. வேகமாக பேருந்தை நிறுத்தச் சொல்ல நடத்துனர் இந்தா வந்துருச்சுங்க என்க கவிஞரய்யா கடுங்கோபத்தோடு அவரைப் பார்த்தார். இடை நிறுத்தம் வரவும் கவிஞரய்யா வேகமாக இறங்க நினைத்தும் அங்கேயும் போட்டி நிலவியதால் மனம் இன்னவெனத் தெரிந்த நடுக்கத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழித்து ஒரு வழியாக இறங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்த பால்ய நண்பன் நின்றுகொண்டிருந்தான். கவிஞரய்யா என ஆசை பொங்க நண்பர் அழைக்க  கவிஞரய்யாவோ எதுவும் பேசும் மனநிலையாது வா என கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார், அவரது மனம் இப்பொழுது கிட்டத்தட்ட பிரஷர் குக்கரைப் போலவே இருந்தது. விழுந்தடித்துக்கொண்டு வந்த கவிஞரய்யா வேகமாக கழிவறைக்குள் வந்தார். கதவு தாழிடுதல் கூட இரண்டு நிமிடங்கழித்தே நடந்தது. கொதி நிலை அவஸ்தை பிரஷர் குக்கர் எல்லாம் இலகுவாக இளகியது மனப்பதட்டம் தணிந்தது. கவிஞரய்யாவின் காகிதங்களில் ஈமுக்கோழிகள் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. மிக மெதுவாக வெளியே வந்தார். கவிதை குறித்து சிந்தித்தார்.



Saturday, 6 October 2012

புலம்பல் பிராணி அய்யப்ப மாதவனுக்கு...





// தீர்த்த முனி என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தமிழ் இலக்கியவாதிகளை கிண்டல் செய்யும் நாதாரியின் உண்மையான முகத்தை விரைவில் கிழித்தெறிவோம். உண்மையில் துணிபு இருந்தால் உண்மையான பெயரில் வந்து விமர்சனம் செய் பெட்டை பையலே... இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே... நேரே பார்த்தால் உன்னை எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்.//

- அய்யப்ப மாதவன்

அய்யா அய்யப்ப மாதவனாருக்கு. எல்லாவற்றையும் பப்பளக்கா என திறந்து போட்டு எந்நேரமும் உண்மைச் சொரூபத்தை முகநூல் வழியாக வாரி வழங்குபவரே. உங்களுக்கு என் வணக்கம். உங்களின் உண்மையான முகம் கிழிந்து தொங்கி நாற் நாறாகி காலம் பலவாயிற்று. உண்மையில் முகத்தைப் போட்டும் எந்த விமர்சனத்தையும் இதுவரை துணிவோடு எழுதாத நீர் எனக்கு யோசனை சொல்வது. ஏதோ கிடைத்து எதற்கோ குரைப்பதைப் போல் உள்ளது. உங்களுக்கு தெம்பு வந்து, உண்மையான முக லட்சணத்தோடு  இதுவரை நீங்கள் தமிழ் இலக்கியத்தில் கிழித்துக்கட்டிய தோரணங்களைக் காட்டுங்களேன்.

இது உங்களது அகந்தைக்கு…

பெட்டை,
மனைவியிடம் எளிதாக கிடைக்கும் சுகம்…

அய்யா பெட்டை என்றால் என்னவென்று தெரியுமா இதன் முலம்  திருநங்கைகளை நீங்கள் எவ்வளவு அறுவெறுப்போடு பார்க்கிறீர்கள் என உங்களின் அடிமன ஆழம் காட்டிக்கொடுத்துவிட்டது. நான் சொன்ன சொல்லில் மாறாமல் உங்களைப் போல் புழுக்கள்…இன்னும் கவிதையில் நான் மரத்தை நேசிப்பவன், மட்டை, குளம் குட்டைகளை நேசிப்பவன் ஆனால் சக மனிதனின் மண்டையைப் பொளப்பேன் என்பதுதானய்யா உங்களது இலக்கிய நாட்டம். கழிசடை வார்த்தைகளை உள்ளே எச்சீயூறி வைத்துக்கொண்டு, முகநூலில் உத்தம கோமணத்தை வரிந்து கட்டி. நான் உத்தமபுத்திரன் என உளறுவது நான் கண்டுவந்தது தானய்யா. உமது கேவலமான புத்தி உமது ஆத்திரத்தின் வழியாக அதன் சொரூபத்தைக் காட்டிவிட்டது. நான் செய்தது நாலு கவிதைகளை எடுத்து இயம்பியது. நீங்கள் செய்தது….கேவலமய்யா கேவலம்.

அய்யா திருநங்கைகளைக் கேலி செய்யும் உங்கள் பொது புத்தியை நான் புரிந்துகொள்கிறேன். இது உங்களைப் போல மூன்றாந்தர கவிஞர்களுக்கு வாய்க்கும் இயல்புதான்.

எந்நேரமும் கவிதை எழுதுகிறேன் கவிதை எழுதுகிறேன்…உப்பு புளி என விற்றுத் திரியும் நீங்களும் உங்களையொத்த நண்பர்களும்…ஆஹா அற்புதம்.

அய்யா தங்களது வரிகளில் நான் மிகவும் அறுவெறுப்பாக…ச்சீ…ஒரு கேவலமான ஒரு பிறவியா என்னைப் பேசுவது என நினைத்தது இந்த வார்த்தைகளில்தான்

// இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே...//


ஏனய்யா,…நீங்களெல்லாம் காதலையும் காமத்தையும் எழுதுவதைக் கண்டால் எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறதய்யா. அய்யா தாங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தங்களது இல்லக் கிழத்தி தூக்கிக்காட்டி காமத்தை எளிதாக தந்துவிடுகிறார்களா…அய்யா நாய்களைக் கவனித்திருப்பீர்கள்.கவிஞரல்லவா…! ஐந்தறிவு சீவன் அது. அதற்கும் போட்டிகள் பொறாமைகள். சண்டை போடுவது எல்லாம் உண்டு. ஆனால் போறபோக்கில் எளிதாக கிடைக்கும் சுகம் என்று எழுதியிருக்கிறீர்கள். அய்யா புலவரே…உங்களுக்கு வாய்த்த அந்த இல்லக்கிழத்தியை நினைத்து வருந்துகிறேன். என்றைக்காவது இல்லக்கிழத்தியின் நிர்வாணத்தை கண்ணெடுத்துப் பார்த்திருந்தால் இது போல் அசிங்கங்களை நீங்கள் முன் வைத்திருக்க மாட்டீர்கள், ஆனால் இரவில் விரலால் துளை தேடி கவிதை எழுதுபவர்தானே அய்யா நீங்கள்

வணக்கம் அய்யா.


அய்யா உங்களது முகப்புத்தகத்தை முழுதாக கீழே தள்ளிப் பார்த்தேன்…அதில் அனைத்திலும் கவிஞர்களை மதிக்காத சமூகம் உருப்படப்போவதில்லை, நாசமாகப் போகவேண்டும்…மண்ணோடு மண்ணாக வேண்டும் என புலம்பியிருந்தீர்கள், உங்களைப் போன்ற அறுவெறுப்புப் பிடித்தாட்டும் ஒரு பிராணியை கவிஞர் எனச் சொல்ல முடியுமா அய்யா…

அய்யா நீங்கள் கருவறையை விட்டு வெளியே வந்ததும், விரைகளை உள்ளுக்கிழுத்து எங்கே காகிதம், எங்கே எழுதுகோல் எனக் கர்ஜித்து…

அடிப் பிண்டமே..
எளிதாய் கிட்டிய சுகத்தில் என்னை
பெற்றுப்
பேண்டவளே…

என கவிதையெழுதி அன்னையிடம் நீட்டிய கவிசிம்மம் நீர்…
வாழ்க வளமுடன் அடியேனுக்கு அந்தக் கீர்த்தி கிடைக்கவில்லை. உங்களை உங்கள் கவிதைகளை, நான் புகழவும் இல்லை, இகழவும் இல்லை. ஆனால் இதற்கு நீங்கள் அனுப்பிய வார்த்தைகள் அபாரம். இகழ்ந்தால் இதற்கு மேலே வந்திருக்கும், புகழ்ந்தால் எனக்கு நல்லதொரு விளம்பரத்தை உங்களது பக்கத்தில் தேடிக்கொடுத்திருப்பீர்கள்.

ஆனால் அய்யா…பெட்டை, மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகம் என்றெழுதிய உங்களைப்போன்ற ஒரு மூன்றாந்தரத்தை பொருட்படுத்தி விமர்சிப்பது என்னால் ஆகாத காரியம்.

வணக்கம் அய்யா.

Tuesday, 2 October 2012

கவிஞர்- ஆத்மார்த்தியின் வருடும் சலங்கை - யை விமர்சித்து






வருடும் சலங்கை



ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள் அலாதியானவை.
தட்டப்படாத கதவுகளுடனான ஓரிடம்.
தடையிலா மின்வசதி இன்னபிற அவஸ்யம்.
ஒளிபொங்குகிற படுக்கயறையின் சுற்றுச்சுவர்களில்
முலைப்பால் வெண்மையோ அல்லது ஐஸ்க்ரீம் நிறமோ பூசப்பட்டிருப்பது உத்தமம்.
சுற்றிலும் கேமிரா சுழலும் வண்ணம் வாகான மையத்தில்
கட்டில் இடமாற்றப்படுகிறது முக்கியம்.
கடிகாரம்,சுவர்ப்படம், எனத் தேவையற்ற எந்தப் பொருளும்
இல்லாமல் பார்த்துக்கொள்வது சூட்ஷுமம்.
அறையுள் இணைந்தாற்போல்
மேற்கத்திய பாணிக் கழிவறை சௌகர்யம்.

எளிதில் அகற்றிவிடக்கூடிய உள்ளாடைகள்
அணிவித்துக்கொண்டு காத்திருக்கிற அவன்
அவஸ்தையினூடே புன்னகைக்கிறான்.
அவளோ பல அர்த்தங்களை மென்றுகொண்டிருக்கிறாள்.
கேமிராவைக் கையாள்பவன்
அவர்கள் இருவருக்கும்
எந்த வரிசைப்படி என்னென்ன செய்யவேண்டும் என்ற "கதை"யை விவரிக்கிறான்.
அதனைக் கவனமெடுத்துக் கேட்டுக்கொள்கிறார்கள் இருவரும்.
"என்னென்ன செய்யக் கூடாது" என்பதை
மெல்லிய குரலில் கண்டிப்புடன்.
அவள் நினைவுபடுத்துகிறாள்
தன் தலையசைப்பின் மூலமாக
அங்கே நடக்கப்போவதன்
முழுப்பொறுப்பையும் தானேற்பதாகக்
கூறுகிறான் கேமிராக்காரன்.

முந்தைய தினத்தின் பிற்பகுதியிலிருந்தே
உபவாசம் இருந்துவந்திருக்கிற அவள்
சீக்கிரம் துவங்கச் சொல்லுகிறாள்.
அவளது நாக்கின் மத்தியில்
"வருடும் சலங்கை"யை அணியவேண்டியிருப்பதை
ஞாபகப்படுத்துகிறான் கேமிராக்காரன்
மன்னிப்புக் கோரியபடியே
அவள் சலங்கையை அணிந்துகொள்கிறாள்.
தம் உடைபொத்தான்கள்
எளிதில் திறந்துகொள்கின்றனவா என
சரியார்க்கின்றனர் இருவரும்.
கேமிராவைக் கையாள்பவன் தன்
கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறான்.
அவர்கள் இருவரும்
அந்த அறைக்குள் நுழைகின்றனர்.
விளக்குகள் உயிர்பெறுகின்றன.

ஆத்மார்த்தி




இது உரையை விளக்கி, ஆத்மார்த்தி அய்யா அவர்களின் கவிதை விளக்கக் குறிப்புகளை சற்று இடம் நீக்கிப்,  பொருத்திய விளைவை கீழே காணலாம்.

ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள் எப்போதும் விஷேசமானவை. அதற்கு தட்டப்படாத கதவுகளைக்கொண்ட ஓரு மறைவிடம், மற்றும் தடையிலா மின்வசதி இன்னபிற கட்டாயம். ஒளிபொங்குகிற படுக்கயறையின் சுற்றுச்சுவர்களில் முலைப்பால் வெண்மையோ அல்லது ஐஸ்க்ரீம் நிறமோ பூசப்பட்டிருப்பது நல்லது. சுற்றிலும் கேமிரா சுழலும் வண்ணம் தோதான  மையத்தில் கட்டில் இடமாற்றப்படுவது அவசியம். கடிகாரம், சுவர்ப்படம், எனத் தேவையற்ற எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது இடத்தைக் காட்டிக்கொடுக்க உதவி செய்யாது. அறையுள் இணைந்தாற்போல் மேற்கத்திய பாணிக் கழிவறை சௌகர்யம்.

இப்போது எளிதில் அகற்றிவிடக்கூடிய உள்ளாடைகள்  அணிவித்துக்கொண்டு காத்திருக்கிற அவன்  சொல்லமுடியாத அவஸ்தையினூடே புன்னகைக்கிறான். அவளோ பல அர்த்தங்களை மென்றுகொண்டிருக்கிறாள். கேமிராவைக் கையாள்பவன்  அவர்கள் இருவருக்கும் எந்த வரிசைப்படி என்னென்ன செய்யவேண்டும் என்ற "கதை"யை விவரிக்கிறான். அதனைக் கவனமெடுத்துக் கேட்டுக்கொள்கிறார்கள் இருவரும். "என்னென்ன செய்யக் கூடாது" என்பதை  மெல்லிய குரலில் கண்டிப்புடன். அவள் நினைவுபடுத்துகிறாள் தன் தலையசைப்பின் மூலமாக அங்கே நடக்கப்போவதன் முழுப்பொறுப்பையும் தானேற்பதாகக் கூறுகிறான் கேமிராக்காரன். முந்தைய தினத்தின் பிற்பகுதியிலிருந்தே உபவாசம் இருந்து வந்திருக்கிற அவள் சீக்கிரம் துவங்கச் சொல்லுகிறாள். அவளது நாக்கின் மத்தியில் "வருடும் சலங்கை"யை அணியவேண்டியிருப்பதை ஞாபகப்படுத்துகிறான் கேமிராக்காரன். மன்னிப்புக் கோரியபடியே அவள் சலங்கையை அணிந்துகொள்கிறாள். தம் உடைபொத்தான்கள் எளிதில் திறந்துகொள்கின்றனவா என சரியார்க்கின்றனர் இருவரும். கேமிராவைக் கையாள்பவன் தன் கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறான். அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் நுழைகின்றனர். விளக்குகள் உயிர்பெறுகின்றன. இயக்குனர் கேமராவைச் சுழல விடுகிறார். 

(டெயில்- பீஸ்)அறைக்கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும் பெண் துணுக்குற்றாள். இயக்குனன் திசை மறந்தான். நடிகன் குறி மறந்தான். சப்தம் அறையைத் துளைத்தபடி சென்றது. அறைக்கு வெளியே செவ்வாடையுடுத்தி அக்குளை மழித்தபடி நித்யானந்தா கதவைத் திற காற்று வரட்டுமென்றார். காற்று வந்தது. )



ஒரு நீலப்படத்தை உன்னிப்பாகக் கவனித்து திரைக்குறிப்புகளை துண்டித்து இட்டதன் மூலம் இதை கவிதை எனும் வடிவத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார் கவிஞரய்யா.
……………………………........................
…………......................................................
………………………………....................
………………………………....................
 ………………………………...................
………………………………....................

இந்த வடிவத்தில் இருந்ததை

…….......
………….
……………………..
………………………………..
…………….
…………………………..
…………………

இந்த வடிவத்தில் கொண்டு வந்த வினைகள் இவை. இது முழுக்க முழுக்க மேற்கத்திய பாணிகளை பின்பற்றி விளக்கம் சொல்லிற ஒரு மரபு.
இதோ ஒரு உதாரணத்திற்காக……

நான் வாழ்ந்த தெருவில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அம்மரத்தை தினமும் கடக்கையில் நான் கவனிப்பேன் ஒரு மஞ்சள் பறவை கடந்து போகும்.

இது நேரிட்டையான ஒரு வார்த்தை அமைப்பு. இதை கவிதையாக்கம் பெறச் செய்ய வேண்டியது, மேற்குறித்த கவிஞரய்யாவின் பாணியைப் பின்பற்றி நாமும் துண்டித்து ஒட்டுவதோடு திரைக்குறிப்புகளையும் சற்றுத் தூவுவோம்.


அடர் பச்சை இலைகளை
வெளிர் ஓரத்தில் கத்தரித்தபடி
மரம்
வேம்பென்றழைப்பதில்
மாறும் நிறம்
கருத்த நிழலையும்
பட்டைகளையும்
வெயில் தாக்காத நிறமாய்
தன் நெடிய உடலைச் சுமந்தபடி

நீள அகலமும்
வெயிலைப் பருகும் தன்மையும்
புழுதியுடனும்
தன்னை விரித்துக்கொண்ட தெரு

நெடிய கால்களால் அலுப்புற்று

அதைச்
சரிந்து கடக்கும்போது
நீலத்தைத்
திணித்த வண்ணத்தைப் புசித்தவாறு
கிடக்கும்
மேகத்தை விழியசைய
பார்த்தவாறு கடப்பேன்
தெருவை

கடந்து போகும்
இறகில் மஞ்சள் வண்ணச் சாயம்
நீலத்தையும் நிழலையும் இணைக்கும்
கால்களை செங்குத்தாக மடக்கிக் கடக்கும்
பறவையை
மஞ்சற்
பறவை

இவ்விடத்தில் இதை கவிதையாக முடிக்க ஒரு இருதிச் சொல் தேவைப்படுகிறது அதை இவ்வாறு இட்டுவைப்போம்

வானம் மஞ்சளைச் சூடிக்கொண்டது.

இவ்வகைக் கவிதை அமைப்புகள் சலித்த மனநிலையுடனும், கவனப்படுத்துகிறோம் என்கிற உற்சாகத்துடனும் கவிஞர்களால் எழுதப்படுகிறது. எழுதி முடித்ததும் கவிதையை சீராக ஒழுங்குபடுத்துவதில் குறிப்புக்களாய் விரியும் மரபைக் கொண்டது.

வாசகர்கள் தாங்கள் நாளும் பார்க்கும் ஒன்றை இதன் மூலம் குறிப்புகள் எழுதி தங்களது கவிதைத் தன்மையை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் கவிதை… முக்காட்டைப் போட்டுக்கொண்டு இருட்டுக்குள் ஓட்டமெடுக்கும். குழந்தைகல், பெண்கள், ரோட்டோரத்தில் படுத்துக்கிடக்கும் நாய், வாலை சுருட்டும் பூனை…ஏன், இன்னும் சாலையைக் கடக்கும் பேருந்தையும் விவரித்து எழுதலாம்

கனத்துத் தடித்த
நிறத்தால்
நீண்ட செவ்வகம் படுத்துக்கிடந்து
சக்கரக்கருமை நான்கு திசைகளையும்
வெறித்து நகர
சந்துகள் முனை மழுங்கி
வழிவிட்டது

தகரக்குரலோடு
நீண்ட விளக்குகளையுடை தெருவில்
டீக்கடைகள் பரப்பி வைத்திருக்கும்
உருண்டை வடிவ நேர்த்தியையொத்த போண்டாக்களை கடந்து
வட்டவடிவ
உளுந்த வடைகளில்
இமை கனத்த தூசியைப் படரவிட்டு
மனிதர்கள்
முகஞ்சுருங்க
மலைத்து வரும்
மலைப்பாம்பு…

வாசகர்களே இங்கு போண்டா உளுந்த வடை என்பது கவிதை வடிவங்களில் நீங்கள் இதுவரை வாசிக்காத காரணத்தால் இதை நீங்கள் காமெடி என்ன எண்ணலா, ஆனால் அவ்விடத்தில் போண்டாவுக்குப் பதில் உருண்டை வடிவ கோளத்தையும், வட்டவடிவ கருந்துளையையும் என இட்டுப் பார்த்தல் உங்களுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும். இது கவிதையை விரித்து விளங்கங்களை மேற்கத்திய பாணியைத் திணித்து வீங்க வைக்கும் ஒரு விளக்கக் குறிப்பு. இக்கவிதையை வேல் கண்ணன் அய்யா பக்கத்தில் கண்டேன். அவருக்கு என் மகிழ்ச்சி கலந்த அன்பான நன்றிகள்.



சிந்திப்பதைப் போல ஒழுக்கம் கெட்ட காரியம் வேறெதும் இல்லை வாசகர்களே…..

- தீர்த்தமுனி

அன்பான வாசகருக்கு...




கவிதை தன்னளவிலேயே எளிமையானது. எளிமை என்ற பதம் கூட சற்று மிகையுணர்ச்சிகொண்டதாக அமையும். அந்தளவுக்கும் கீழான எளிமையே கவிதை. அதன் இயல்பே அதுதான். அதனால்தான் அது வசீகரிக்கிறது. கவிதையுலகம் மிக நேரடியாக வாசகரைச் சார்ந்திருந்தாலும் அது தன்னளவில் தனித்தே இருக்கிறது, கவிதை அழகானதும் கூட, அது திட்டமிட்டு ஒப்பனைகளால் ஆன அழகல்ல். அதற்கேயுரிய அழகு. கிராமத்தில் முள்ளோடு விளையும் கற்றாழைப்பழத்தையொத்த, அதற்கு நிகரான ரோஜாவையொத்த அழகும் கூட. நமது வியாக்கியானப் புலிகளின் ஸ்டாண்டில் தொங்கும் விளக்கப்பட்டு ஜொலிக்கும் அழகை எடுத்து எதன் மீது போட்டாலும் அது வக்கிரத்தை அளவுக்கதிகமாக் கூட்டித் தருகிறது.

கவிதைகளை வார்த்தைப் போர்வைகளால் மூடுபவர்கள் அதன் எளிமையை மூச்சுத் திணற வைத்துக் கொன்றே விடுகிறார்கள். வெளிப்படுத்துகிறேன் என்பவர்களோ வெட்டவெளியில் பொசுக்கிக் கொல்கிறார்கள். ஆனால் கவிதை அவர்களின் அகத்தாக்கத்துக்குள் எவ்விதம் மாற்றமும் அடையாமல் அப்படியே ஒரு பாறையாய் கனத்துக்கொண்டிருக்கிறது. கவிதையை அணுகுபவர்களுக்கு கல்வியில்லையேல் அவர்களை இலக்கணம் தலைகுப்புற அவர்களை தள்ளி விடும், ஆனால் கவிதை இலக்கணத்தில் அமைவதல்ல. இதுவே கவிதையின் முதல் விதி.

பெரும்பாலும் ஜப்பானிய ஹைக் – கூக்கள் இலக்கணத்தை அகற்றிவிட்டு அங்கு எளிமையைக் கொண்டு வந்துவிடுகிறது. அதனால்தான் அது கவிதையாக மாறுகிறது. கவிதையை விளக்க கவிதையை எழுதிக்கொண்டிருக்கமுடியாது என்பதுதான் அடிப்படை. ஆனால் கவிதைக்கு தொடங்கு களம் நிகழ்த்துகளம் எதுவுமேயில்லை.
என் அம்மா நீண்ட நெடுங்காலமாக உழைக்கிறாள் ஒரு பிடிச் சோற்றுக்காக…அவளது உள்ளங்கையில் குவிந்திருக்கும் சோற்று ருசியில்தான் கடவுளும் சம்மணமிட்டு தனக்காக பருகையை பெற்றுக்கொள்கிறார். இவ்வகையிலான எளிய வரிகளின் மூலம் அது உணர்த்தும் பொருளின் மூலம் கவிதையின் சிறு நடைபயிற்சியைக் காணலாம்…

எனக்கொரு கனவு இருக்கிறது என லூதர் சொன்னதை இதன் கீழ் பொருத்திப் பார்க்கலாம். அந்த வரிகளை நாம் எத்தனையோ முறை எத்தனையோ இடங்களில் சொல்லியிருக்கலாம், ஆனால் அவ்வரிகளைச் சொல்ல லூதர் வாழ வேண்டியிருந்தது, அந்த வரிகளுக்காக தன் வாழ்க்கையை  ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய அரசியல்வாதிகள் மேடையில் ஆற்றுவது பெரும்பாலும் கவிதைதான். எந்தளவுக்கு கவிதையை நாம் தாங்கி, தோள்கள் வலிக்கத் தூக்கிப் பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு தன் உடலை கீழே இறக்கிக் கொள்ளுகிறது. கவிதை எழுதுகிறவர்கள் தங்களது வாழ்க்கையை கவிதைக்கு ஒப்புக்கொடுப்பதில்லை. ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் சற்று பணிய வேண்டும். ஆயுதத்தைப் பயிற்சி இல்லாது ஆயுதத்தை எங்கனம் கையாள முடியும். இங்கோ சிறுகுழந்தைகள் காலகட்டி அட்டைக்கத்திகளை வைத்துக்கொண்டு யுத்தங்களுக்கு வருகின்றன. கவிஞன் அவர்களைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு உன்னை போல் ஒரு வீரன் இல்லையே குழந்தை என இறக்கிவிட்டுச் செல்வான். ஆம் நண்பர்களே ….


கிரேக்க ஞானிகளில் ஒருவரான ஜெனஸை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எந்த அளவுக்கு இலகுவானவரோ அந்தளவுக்கு எளிமையான குணங்களை உடையவர். மிக முக்கியமாய் கவிஞர்.  ஒரு கவிஞன் தன் வாழ்நாளை கவிதையிடம் ஒப்படைப்பதென்பது எவ்வளவு வசீகரமானது. அது உண்மையில் பேருவகையும் கூட. ஜெனஸ் கவிதைகளிடம் பற்றுக்கொண்டதனால் அதன் எளிமை அவரை எதிலும் பற்றுக்கொள்ளவிடாமல் ஆக்கியது. அதனாலேயே அவர் ஞானியென்றழைக்கப்பட்ட கவிஞரானார். ஆனால் ஜெனஸோ ஞானியை உதறிவிட்டு கவிதையை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டார், ஏனென்றால் ஞானத்திற்கு கவிதையிடம் இருக்கும் அறுவெறுப்பை கவிதையால் அறிந்தவர் அவர்.

எதன் மீதாவது பற்று வைக்கும் போது அது அசிங்கத்தை உன் மீது பூசி விடுகிறது. ஒரு பொருளைப்போல கையில் இறுக்கமாகப் பிடிக்க ஒத்துப் போக வேண்டியிருக்கிறது. அதனால்தான் உன்னதத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு எளிமையைக் கையில் வைத்துக்கொண்டார். எளிமையோடு இருப்பதென்பது ஆளுமைகளுக்கு சாபம் அல்லவா. அரசு அவரது எளிமை எல்லோரையும் பற்றிப் பீடிக்கும் நோய் எனத் தெரிந்து அவரைக் கைது செய்ய யோசனை செய்துகொண்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவர் அடிமை வியாபாரிகள் அவரை விலைக்கு விற்க நினைத்தனர். அவரைப் பிடிப்பது மிகக்கடினம் என வியாபாரிகளுக்குத் தெரியும். ஜெனஸ் கிட்டத்தட்ட டார்ஜானைப் போல இருப்பார். ஒரே நேரத்தில் எட்டு பேரை தூக்கியடிக்கும் எளிமையும் வலிமையும் அவருடையது. பிடிக்க வந்தவர்களோ நான்கு பேர்கள். அவரைப் பிடிப்பது சிரமம் என உணர்ந்த போது அவரைச் சூழ்ந்து கொண்டனர்.


ஜெனஸ் சொன்னார் பயப்படாதீர்கள் குழந்தைகளே நான் உங்களுடனேயே இருப்பவன். என்ன விசயம் சொல்லுங்கள், எதுவும் பிரச்சினை இருந்தாலும் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறேன் என்றார். அவர்கள் இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைக்க விரும்ப மாட்டீர்கள் என்றார்கள். அவரோ நான் தீர்த்து வைக்காத பிரச்சினைகள் இருந்தால் அது எனக்கு சவால்தான் பரவாயில்லை சொல்லுங்கள் என்றார். அவர்கள் இதுதான் எங்கள் எண்ணம் உங்களை பிடித்துக்கொண்டு போய் விற்கவேண்டும் என்றார்கள். அவர் சரிதான் பிறகு எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? யாருக்காக? இதோ என் கைகள் ஆரம்பியுங்கள் என்றார்.

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இதில் என்னவோ இருக்கிறது எனச் சந்தேகப்பட்டார்கள். இப்படி விட்டுக்கொடுக்கிறாரே! அவர் சொன்னார் கவலையே வேண்டாம் நான் சண்டையே போடமாட்டேன். நான் அப்படியே மிதந்து போகிறவன் அதுதான் என் வாழ்வின் போக்கே. எனவே நீங்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போகலாம் என்னை சிறை பிடித்துக்கொள்லலாம். முழுமைக்கு அதுதான் வேண்டுமென்றால் நடக்கட்டும் என்றார் ஜெனஸ். அவர்களுக்கோ மறுபடியும் பயம். என்றாலும் முயன்றார்கள். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது. அவர் சண்டை போடப் போவதில்லை.

விலங்கிட்டார்கள். அவர்களோடு அவர் போனார். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை யாரும் அடிமையாக்கிக்கொள்ள முடியாது. அவரோடு நடந்து போனபோது அந்த நான்கு பேரும் முட்டாள்களாகத் தெரிந்தார்கள். ஜெனஸ் சொன்னார். பயமே வேண்டாம். அந்த சங்கிலிகளெல்லாம் வேண்டியதே இல்லை. நான் எப்போதும் உங்களோடு வருகிறேன். உங்களை விலகிப் போகவே மாட்டேன். அவர்களுக்கு பயமோ கூடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன ஆள் இவன் எப்படிப்பட்டவன்?

ஆனால் அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்து கொண்டார்கள். உயர்ந்தவர் உயர்ந்தவர்தானே. சிறையில் கூட தலைவன் தலைவனாகவே இருக்கிறான். போகப் போக அவர்கள் தன் பிரச்சினையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்தான் அவ்வளவு மகிழ்ச்சியான ஆளாயிற்ரே. வெகு பரவசமாக இருந்தார். இந்த உலகத்தைச் சேர்ந்தவரைப் போலவே இல்லை.

சீக்கிரத்தில் தோழர்களாகிப் போனார்கள். தோழர்கள் மட்டுமல்ல சீடர்களாகிப் போனார்கள். ஜெனஸை விற்க சந்தைக்குப் போய்ச் சேரும்போது அவர்கள் அவரது சீட்ர்களாகவே ஆகிவிட்டார்கள்னார்கள். இவர் குருவாகிப் போனார். குருவே இதைச் சொல்லுங்கள் …குருவே அதைச் சொல்லுங்கள்…குருவே இதென்ன அதென்ன என்றார்கள். அவரோ என்னை விற்பதற்கு வந்திருக்கிறீர்கள். அதை மறந்து போகாதீர்கள், உங்களது உணர்வு மங்கிப் போனதா என்ன? மறக்காதீர்கள், எதற்கு என்னைப் பிடித்து வந்தீருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என்றார். அவர்கள் அதை நாங்கள் இபோது செய்யமுடியாது, ஆனால் அவரோ கலவலையே படாதீர்கள் உங்களுடைய திட்டத்தைக் கைவிடாதீர்கள். உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன். அவர்களால் நம்பவே முடியவில்லை. என்ன செய்யப் போகிறார்?

பிறகு அவர்கள் சந்தை மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லோருக்கும் அவரைப் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது. சந்தை முழுக்க அந்த அடிமை மீது ஆர்வம் கொண்டுவிட்டது. ஏனென்றால் இதற்கு முன் அவ்வளவு அருமையான அடிமையை அந்த சந்தை பார்த்ததேயில்லை.
ஏலம் கூறுகிறவன் வந்தான். ஜெனஸ் வந்து நிற்க அவன் ஜெலஸை ஏலத்தில் விட அவரை வர்ணித்தான். இவன் அருமையானவன், ஆரோக்கியமானவன் பலமிக்கவன், ஜெனஸ் குறுக்கிட்டார் ‘நிறுத்து. நான் அங்கே வருகிறேன். எப்படி ஒருவனை அறிமுகப்படுத்தி விற்பதென்று உனக்குத் தெரியவில்லை. ஏலம் கூறுகிறவன் கீழே இறங்கினான் அவர்தான் பலசாலியாகவும் அதிகாரத்தோடும் இருந்தாரே? ஜெனஸ் மேடையேறினார். எந்த அடிமைச் சந்தையிலும் நடக்காதது நடந்தது. ஜெனஸ் கூறினார். “அடிமைகள் எல்லோரும் இங்கே வாருங்கள், எஜமானன் ஒருவன் விற்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறான்….”

இங்குதான் கவிதை தொடங்குகிறது. அத்தனை எளிமையாக அத்தனை இலகுவாக.

பறக்கும் போது பறவை 
சிறகைப் பற்றிக்
கர்வம் கொள்ளுவதில்லை. 
அது 
பறந்து கொண்டிருக்கிறது....