Showing posts with label ஆத்மார்த்தி. Show all posts
Showing posts with label ஆத்மார்த்தி. Show all posts

Thursday, 18 October 2012

எனதன்புக் கண்மணி ஆத்தாமார்த்திக்கு….





//தீர்த்த முனி என்பவருக்குக் கவிதை குறித்து எந்த விதமான புரிதல் இருக்கிறது எனத் தெரியவில்லை. முகநூலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற அளவில் அவர் எதை எதையோ கவிதைக்கான விமர்சனம் என்ற அளவில் செய்துவருகிறார்.//

பிறகு ஏனய்யா விமர்சனத்திற்கு உங்களது கவிதையை அனுப்பியதோடு வசுமித்ர கவிதையையும் அனுப்பினீர்கள். முகநூலில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதி அதைக் கவிதை எனச் சொல்லுவது சங்கடமய்யா. சத்தியம்தான் நான் படித்த புத்தகமய்யா சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவமய்யா


//அவரை முதல் முறை பிளாக் செய்து பிறகு அடுத்தமுறை அவரை அன்பிளாக் செய்து ..//

இது என்னய்யா… யாரோ எவரோ எதுக்கு பிளாக் செய்து அன்பிளாக் செய்து…ஒரே ரகளையாக இருக்கிறதே. உண்மையைப் போட்டு உடைத்தேன் என்பதற்காக வேறு வழியின்றி பிளாக் செய்து, உடனே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என அன் பிளாக் செய்து…சங்கரா…சங்கரா….

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…


//அவரது முக நூல் பக்கத்திலேயே நான் வசுமித்ர என்பவரின் கவிதைகள் இரண்டை எடுத்து அவரை விமர்சிக்க செய்தேன்.அவர் வசுமித்ரவின் கவிதைகளையும் தனக்கே உரிய குழப்பமான மற்றும் மேலோட்டமான வார்த்தையாடல்களால் விமர்சித்தார்.//


விமர்சனம் தெளிவாக உள்ளது ஆத்மார்த்தியாரே.
உள்ளதைச் சொல்வேன்…சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும்     தெரியாது.


//அதன் பின் அய்யப்ப மாதவனைப் பற்றி ஆபாசமாக தரக்குறைவாக எழுதினார்.//


அடக்கலிகாலமே….இதுதான் அய்யப்ப மாதவர் எழுதிய அருமையான வரிகள்…


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா…சுப்புரமுனி.

// “ தீர்த்த முனி என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தமிழ் இலக்கியவாதிகளை கிண்டல் செய்யும் நாதாரியின் உண்மையான முகத்தை விரைவில் கிழித்தெறிவோம். உண்மையில் துணிபு இருந்தால் உண்மையான பெயரில் வந்து விமர்சனம் செய் பெட்டை பையலே... இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே... நேரே பார்த்தால் உன்னை எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்”//

                   குங்குமப் பூவே கொஞ்சுப்புறாவே
                 தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் சொக்குது தன்னாலே….

//அதன் பின் மனோன்மணி என்னும் புது எழுத்து ஆசிரியர் தன்னிடம் ஒரு விமர்சனக் கட்டுரை கேட்டுவிட்டார் எனவும் அதற்காக இஸ்ரேலியம் என்னும் தொகுப்பை விமர்சனம் எழுதுவதாகவும் அடிக்கடி தன் சுவரில் தானே பதிவிட்டுக் கொண்டார்.//


அது உங்கள் கவிதையை எனக்கனுப்பி விமர்சனம் செய்..       விமர்சனம் செய்… என நீங்கள் ஞை ஞை ஞை என மண்டையைக் கிளறிக் கேட்டபொழுது  நான் இட்ட பதிலய்யா அது. ( கொசுறு தகவல் எனது விமர்சனம் புது எழுத்தில் வரவிருக்கிறது.அய்யா மனோன்மணி சொல்லியுள்ளார்.) நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே…


//அதன் பின் அவர் தற்போது எது கவிதை எது கவிதையல்ல என 7 பாயிண்டுக்களோடு தன் பிளாக்-இல் எழுதத் தொடங்குகிறார்.//

இந்த ஆறு பாயிண்டுகளையும் கோட்டை விட்டீரே…குப்பண்ணா…
இதுதானே கவிதைகளில் அடிநாதம், வெடிநாதம்.

1. சொற்களைச் செதுக்குதல், வடமொழிச் சொற்களை வலியத்திணித்தல்.

2 .வரிகளை அடுக்குவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும்
   வித்தியாசங்கள்,  கவனமும் கவனமின்மையும்.

3 . விடுகதைப்பாணி, திடீர்ச்சுழற்சி,

4 . படிமங்கள், உருவகங்கள், தொன்மங்கள்

5. உரைநடையின் நேரடித்தாக்கம்.

6 சந்தம், நாட்டுப்புற பாடலின் சாயல்.

இதில் உள்ள குறைகளை நெஞ்சில் திறமிருந்தால், நேர்மைக் குணமிருந்தால், சுட்டிக்காட்டுங்கள் சுப்பண்ணா...

கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே…

//முகம் மறைத்துக் கொண்டு புகழ் விரும்பியாகவும் வக்கிர வெளிப்பாட்டாளனாகவும் இருக்கக் கூடிய தீர்த்த முனியின் நிஜ முகத்தை அறிய வேண்டுமென்ற ஆவல் என்னிடம் இல்லை.//

அதனால் தானே அய்யா இப்படிப் புலம்பித் தீர்க்கிறீர்கள்.

அவனா சொன்னான் இருக்காது அப்படி எதுவும் நடக்காது…நம்பமுடியவில்லை.


//தீர்த்த முனியின் நோக்கமே ஆத்மார்த்தியை வம்புக்கு இழுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பற்றியும் என் முக நூல் கவிதைகளைப் பற்றியும் தாறுமாறாக எழுதுவது மட்டும் தான் என எண்ண வைக்கிறது.//

இதுதானய்யா அசிங்க வக்கிரம். நீங்கள் எழுதியதை குறை சொன்னதினாலேயே மீசையில் மண் ஒட்டவில்லை, நானே பெரியாம்பிள என்கிற உங்களது பெருமை. தாறுமாறாக நான் எழுதிய ஒரு வரியைச் சுட்டுங்களேன் அய்யா…

ஒரேமுறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன் நீயொரு தனிப்பெறவீய்….

//நானாக பதில் அளிக்க வில்லை என்றால் என் சுவருக்கே வந்து ஐய்யா இது கவிதையா எனக் கேட்கிறார்.//

                 கவிதையாய் இருந்தால் கேட்டிருக்க மாட்டேனய்யா.

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்…


//நான் எழுதுவதை எல்லாம் கவிதையா என இவர் ஏன் அளக்க விரும்புகிறார்..?//

                     நீங்கள் அதைக் கவிதை என பொய் சொல்லுவதால்தான்….

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா…மனிதன் தானா இல்லை..நீதான் ஒரு…


//என் மீது தான் குறி வைக்கிறார்.//

                  ஒரு குறியும் இல்லை….எனக்கு பல குறிகள் உள்ளது.

எங்கே அவள் என்றே மனம் தேடுதா ஆவலாய்..ஓடிவா…


//அதற்கு தன்னை விமர்சகன் என்ற போர்வைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு ஏதோ இலக்கிய உலகத்தைக் காக்க வந்த அருளாளன் போலவும் மீட்க வந்த மீட்பன் போலவும் தன்னைத் தானே சித்தரித்துக் கொள்கிறார்.இவரது நோக்கம்,எப்படியாவது மீண்டும் மீண்டும் என் எழுத்துக்களை விமர்சனம் என்ற பெயரில் "இதெல்லாம் கவிதை இல்லை.உனக்கு எழுதத் தெரியவில்லை.நீ இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டும்.உனக்கு கவிதை எதிர்காலத்தில் கைகூடும்.இப்படி எழுதுவது குப்பை.இது கதை சொல்லல்.இது கவிதையா இது கவிதையல்ல.."இவருடைய மொத்த தொனியும்
இவ்வாறாக இருக்கிறது.தான் சொல்லுகிற இடத்திலும் ஆத்மார்த்தி கேட்கிற இடத்திலும் இருக்க வேண்டும் என விரும்புகிற ஒரு வக்கிரமுனி தான் இந்த தீர்த்தமுனி.//

                       சுப்பண்ணா…நான் போர்வைக்குள் எல்லாம் ஒளியவில்லை. பப்பளக்கா என திரந்து போட்டுத்தான் விமர்சனம் செய்துள்ளேன். அய்யோ ஆத்மார்த்தியாரே.. இந்த வக்கிரத்திடம்தானே உங்கள் கவிதையை விமர்சனம் செய்யச் சொல்லி, அய்யா…. எனக் காத்து நின்றீர்.

ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா..நாதமா…கீதமா…


 //இதற்கு பின்னாலும் தீர்த்த முனி எதை எழுதினாலும்...என் கவிதைகளை என் எழுத்துக்களை எதுவுமே எழுத்தில்லை எனக்கு எழுதத் தெரியவில்லை என்ற அளவிற்கு எதை சொன்னாலும் அதனை முழுவதுமாக இங்கேயே பொருட்படுத்தி விடலாம் என்று எண்ணுகிறேன்.ஆம் நண்பரே...என்னை நிராகரியுங்கள்.நான் எழுதுகிற எதுவும் எழுத்தல்ல.எதுவும் கவிதையல்ல.நீங்கள் சொல்வது சரி தான்.எனக்கு எதையும் கற்றுக் கொடுத்து விடலாம் என்றோ என்னைத் திருத்தலாம் என்றோ எண்ண வேண்டாம்.நான் இப்படியே தான் இருப்பேன்.//

உங்கள் குணத்தை மாற்றுவது உங்கள் விருப்பம் அய்யா அதில் எனக்கு எந்த நட்டமும் இல்லை….ஆனால் அவைகளை கவிதைகள் எனச் சொல்லி….ப்ச்…பாவம். நான் உங்களைத் திருத்துவேன் என கனவிலும் நினையாதீர்.

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க..

 //நான் விமர்சிக்கிற யாரையும் நான் நேரடியாக என் முகம் காட்டி...என் சொற்களை நேரடியாக எடுத்துவைத்து விமர்சிப்பது தான் என் வழக்கம்.//

இதுவரைக்கும் யாரை அய்யா அப்படி முகத்தைக் காட்டி விமர்சித்துள்ளீர்கள். எல்லாம் ஒரே பீப்பி சத்தமாக அல்லவா இருக்கிறது.

நலந்தான நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா..

//இது என் நேர்மை.குறைந்த பட்ச விமர்சன அறம்.முகத்தை மூடிக் கொண்டு கல்லெறிவது என்பது கோழையின் செயல்.//

ஆமாம் ஆத்தாமார்த்தியாரே… யுத்தக் களத்தில் முகம் தேவையில்லை அய்யா…அப்படி எழுதிய எழுதிக்கொண்டிருக்கிற நூறு பேரை என்னால் அடையாளம் காட்ட முடியும்.உங்களைப் புகழந்து, பீப்பியடித்த பெயர்களையும் சேர்த்து.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன தீர்த்தமுனி வரியழகா இல்லை…உளியழகா..சாமி…


//நான் கோழையல்ல.தீர்த்த முனி ஒரு கோழை.என் கவிதைகளை நிராகரிப்போம்.தீர்த்த முனி என்னும் நபருக்கு ஒரு சுயமுகம் உண்டல்லவா..?//

மனோகரா…. பொறுத்தது போதும் பொங்கியெழு…
                       
                        வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்து பகை முடிக்கும் சூர வேல்…


//அதை அவர் தைரியமாக வெளிக்காட்டட்டும்.இதற்கான தைரியம் அவருக்கு இருக்கிறதா..?//

உங்களுக்கு உண்மையிலேயே ஒரு கவிதை எழுத தைரியம் இருக்கிறதா?

இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு..ரகுபதி ராகவ ராஜாராம் பசுபதி பார்க்க சிரித்தாராம்…

//கண்டிப்பாக இருக்காது.தண்ணீருக்குள் குசு என்பார்.மலம் என்பார்.//

ஏனய்யா இதெல்லாம் உங்களுக்கு வராதா.ஆரோக்கியமான உடலுக்கு இது அழக்கல்ல அய்யா.

            தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…

//சமூக அக்கறை என்பார்.//

உங்களுக்கு கவிதை அக்கறை போல, எனக்கு சமூக அக்கறை..கொஞ்சம் சர்க்கரை.

ஜெய் ஹோ....ஜெய் ஹோ....

//வீட்டுப் பெண்களைப் பற்றித் தவறாக எழுதுவார்.//

எங்கே அய்யா எழுதினேன்…    ( ஒரு வரியைச் சுட்டுங்கள்)    நீங்கள்தான் வருடும் சலங்கை என ஒரு அசிங்கத்தை எழுதினீர்கள்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே…




//ஒரு மனிதனை எந்த அளவிற்கும் விகாரமாக அருவெறுக்கத் தக்க அளவில் எழுதும் உரிமையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வார்.//

உங்களைப் பற்றிச் சொல்லுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை அய்யா.. அதில் எங்கே அய்யா வக்கிரம் இருக்கிறது. கண்ணாடி பார்க்கும் வழமையுண்டோ அய்யா.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்…உண்மை சொல்லாதது.


 //இன்னும் இருபத்து நாலு மணி நேரம் தருகிறேன் என் நண்பர்களுக்கு...தீர்த்த முனியை நண்பர்களாகக் கொண்ட யாருடனும் எனக்கு நட்பு தேவையில்லை.நான் அவர்களையும் தீர்த்தமுனியாக எண்ணி பிளாக் செய்வேன்.இனி தீர்த்த முனி பற்றி பேச என்னிடம் எதுவும் இல்லை.என் எழுத்துக்களைப் பற்றி அவர் எதை சொன்னாலும் அதை பொருட்படுத்தப் போவதில்லை.//

நீங்க ஏய்யா.. அதப் பொருட்படுத்தனும். ரெண்டு மூணு கவிதைய விமர்சனம் பண்ணு தீர்த்தமுனின்னு எனக்கு அனுப்பணும்….கொடுமை கொடுமை….

ஆடிப்பாரு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா…வெளி வேஷம் போடாட்டா....


//"நேர்கொண்டு வா,பகையே, மார்பிளந்து நீ போடா...முதுகுக்கு குறிவைப்பது என்றென்றும் கோழைகள் செயலல்லவா..?"//

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

அய்யா ஆத்மார்த்தி பாணபத்திரரே..உருப்படியாய் எழுதுவதற்கு யோசிப்பதை விட்டு முகத்தை காட்டு, பாஸ்போர்ட் போட்டாவைக் காட்டு என்பதெல்லாம் காமெடி அய்யா….உங்கள் அழகு முகத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்…சொல்லுங்கள்…

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதினேன்..காற்றில் நானே…



தங்கள் மனங்கவர்ந்த
அன்போடு
தீர்த்த……முனி…………………………..




ஆத்தாமார்த்தியாரே…
கீழ்காணுபவைகள். நீங்கள் எழுதிய வருடும் சலங்கை என்கிற ஒரு மூன்றாந்தர வரிகளைக் குறித்து… நான் வரைந்த கொஞ்சும் சலங்கை விமர்சனம்…


...................கவிதையில் ஆணாதிக்கத்தை வரவேற்றோ அல்லது வெறுத்தோ அல்லது உரத்த குரலில் போற்றியோ சொல்லட்டும். ஆனால் கவிதை சொல்லக் கூடாது அதன் தன்மை குரல் அல்ல. வார்த்தைகள். குறியீடுகளை வைத்து தத்துவங்கள் பேசட்டும். கவிதையில் உள்ள குறியீடுகளை கவிதை தன்னை வைத்து எடைபோட்டுக்கொள்ளும்.

அதே போல் இது பெண்களுக்கு மட்டுமல்ல இப்பொழுது மும்பை மாநாகரங்களில் ஏன் இப்பொழுது சென்னையிலும் கூட விபச்சாரகன் இருக்கிறார்கள். இது பொதுத்தன்மையல்ல, அப்படத்தை ஒரு பெண் பார்க்கும் விதத்தை அங்கு கவிதையாக்க ஏராளமான இடமிருந்தும் அதை ஆணின் பார்வையில்தான்…இன்னும் ஒரு பத்திரிக்கையாளன் பாணியிலான மொழியையே நீங்கள் அங்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்,  காமத்தில் பெருங்கதையாடல் சிருகதையாடல் விளிம்பெல்லாம் அல்ல. அவை உபயோக்கிக்கும் களத்தைப் பொறுத்து அமையும். மேலும் நீலப்படங்களைப் பொருத்தவரை ஆண்களும் பண்டங்களே. வருடும் சலங்கையை பெண் அணிவது எவ்வளவு முக்கியமாகப் படுகிறதோ. அங்கு அதே அளவுக்கு ஆணின் குறிவிரைப்புக்கு லோஷன் போன்ற இன்னபிற சகல இத்யாதிகளும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அங்கு நிகழ்வது நீங்கள் சொல்லுவது போல் அல்ல. ஆணின் நிர்வாணத்தை ரசிக்க பெண்களுக்கும் இடமுண்டு.

நீலப்படங்களை நீங்கள் வகைபிரித்துக் கண்டதில்லை என நினைக்கிறேன். இங்கு அதிக அளவில் வெளியிடப்படும் மலையாளப்படங்கள் வகையிலான படங்கல் மார்பை மட்டுமே நம்புகின்றன. நீலப்படங்களில் தத்துவத்தை செயல்படுத்தி கவிதையக் கொணரும் படங்களும் உண்டு உங்களுக்கு பல ப்ரென்ச் படங்கள சிபாரிசு செய்யலாம். இதன் மூலம் பல்வேறு செய்கைகள், உண்டு காம வகைப்பாட்டில் எக்கச்சக்க வழிமுறைகள் உண்டு அது தற்சிதைவிலிருந்து கொலைக்கலத்திற்கு தாவும் வகையினங்களாக நிறைய உண்டு அன்பரே. பேசுவோம்...............


இதில் எங்கே அய்யா எனக்கு கவிதை குறித்த புரிதல் தவறாக இருக்கிறது. இது அதை விடக் கொடுமை அய்யா…கொடுமை….


நீங்கள் எழுதியதிலேயே என்னை சிரிக்கவைத்தது இதுதானய்யா…


// நான் தீர்த்த முனியின் நண்பர்கள் -பட்டியலில் ஒரே ஒரு பெயரை மட்டுமே பார்க்கையில் வயிறு எரிந்தேன்.அந்த ஒரு நபர் அந்த பட்டியலில் இருந்து வெளியேறுவது கடைசியாகவேனும் நடக்கவேண்டும் என்பது என் ஆவல்.ஆனால் இந்த நோட்சை நான் பதிவிட்ட அடுத்த கணமே அந்த நபர் திருவாளர் தீர்த்த முனியை தனது பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்.எனக்கு அது போதும்.அந்த நபர் யாரென்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.அவர்,,என் 2330 நண்பர்களில் தலையாயவர்.என்னை கண்டுபிடித்த பாவி.என் முதல் கவிதையை அச்சில் வார்த்த சாத்தான்.அவர் பேர் சுதீர் செந்தில்.அவரிடம் இருந்து தீர்த்த முனியை காப்பாற்றவே அங்கனம் செய்தேன்.//

அய்யா சுப்பண்ணா... யாரந்த சுதீர் செந்தில். என்னமோ…ஒரே காமெடியாய் இருக்கிறது. இந்தக் காமெடியை நம்பி அவர் என்னை முகப்புத்தகத்தில் இருந்து தூக்கிவிட்டால் நீங்கள் மோட்சமடைந்து விடுவீர்களாக்கும். எங்கே உங்கள் கவிதைகளுக்கு நான் எழுதிய விமர்சனம் பார்த்து அவர் வாழ்நாளில் தான் செய்த தவறு உங்கள் கவிதைகளை கவிதைகள் என நம்பிப் போட்டோமே என்கிற உங்களது பயம்தானய்யா இதில் தெரிகிறது…அவர் என் விமர்சங்களைப் படித்தால் நிச்சயம் பாவி உன்னையா ஒரு கவிஞன் என நம்பினேன் எனச் சொல்லவும் கூடும்…


அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா…


அய்யா குப்பண்ணா....ஒரு சந்தேகம்…தீர்த்த முனியை வெட்டி விடு இல்லையெனில் அத்துவிடுவேன் எனக் கச்சை கட்டினீர்களே அப்படி எத்தனை பேர் அத்துவிட்டார்கள்… தகவலே இல்லையே சுப்பண்ணா. கடைசியில் சுதீர் செந்திலைக் காப்பாற்றினேன்…என்னைக் காப்பாற்றினேன் என விழுந்தடித்துக் கொண்டு, என்னையல்லவா தொடர்பறுத்துப் சென்றிருக்கிறீர்கள்….யாழி கிரிதரன் உங்கள் பிழையைச் சுட்டியிருக்கிறார் அய்யா..அதோடு உங்களது அகம்பாவத்தையும்….


யாரையும் யாரிடமும் இருந்து காப்பற்ற இதில் எங்கே அய்யா வேலை இருக்கிறது.

அய்யா உங்களைப்பற்றி ஒரு உண்மை.

பாவம்....ஒரு கவிதைதான் எழுத வரவில்லை,  உள்ளதைச் சுட்டுவோம் எனப்  பொறுப்போடு உதவிகள் செய்தேன். இப்பொழுதுதான் தெரிந்தது…உங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதத்தெரியாதென்று…ப்ச்…பரிதாபம்…என்ன செய்வது…நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்ல அடிமைகள் ஆனால் காதுதான் பேனா வரைக்கும் இருக்கிறது….என் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் இன்னும் உங்களது நட்புப் பட்டியலில் இருப்பதாக தகவல் அய்யா…



வாரான் வாரான் தீர்த்தமுனி
பேஸ் புக் வண்டியிலே
விமர்சனம் பார்த்து நடுங்குனது
யாரு மண்டியிலே

குதிரைவண்டியிலே
பேஸ் புக் வண்டியிலே
மூஞ்சி வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா

பக்கத்து ஊரு தாண்டி
பள்ளம் மேடு தாண்டி
குதிச்சு வராண்டி– பேனா
புடிச்சு வராண்டி..

ஏய்..

வரான் வாரான் தீர்த்த முனி
மூஞ்சி வண்டியிலே
மானம் காத்து ஒடிப்போனார்
குதுர வண்டியிலே..

மாடு வண்டியிலே- முக
நூலு வண்டியிலே....




Saturday, 6 October 2012

விமர்சனத்திற்கு ஆத்மார்த்திய அனுப்பிய வசுமித்ர கவிதை.






ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......

வசுமித்ர.


என்ன செய்யலாம் கவிஞனை
ஆற்றாமையை
ஒரு ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன் வானமும்
வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்
பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது...



அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள்
அமைதியாக
இருக்கும்போது
நாடு
தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான்
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.



அன்பு ஆத்மார்த்தி இவைகள் கவிதைகள்தான். அறிமுகத்திற்கு நன்றி.

அய்யா...இரு கவிதைகளையும் வாசித்தேன்.இவையிரண்டுமே காதலையும் அரசியலையும் அதனதன் போக்கில் வைத்து மத்தியஸ்தம் பண்ண ஒரு வாசகனை முன்வைத்து நகர்கிறதய்யா…

முதக் கவிதை காதல் கவிதை எழுதியவர்களை விட எழுதுபவர்களை காரணம் கேட்டு கவிதை தன் உடலிலிருந்து கேள்விகளை எழுப்புகிறது,  கவிதைக்குரிய பண்புகள் இதனுள் மொழியில் ஒற்றறியும் தன்மையைக் கொண்டு விரட்டியபடியே செல்கிறது,. கவிதைக்கான வரிகளை விதந்தோதுவதோடு அவற்றின் கைகட்டல்களைச் சுட்டிச் செல்லுகிறார்.

ஒரு
ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்

இவ்வரிகள் கவிஞரய்யாவின் காமத்தின் சித்திரங்களை வாசிக்குமாறு நவீன வாசகனின் முன் வீசிவிட்டுச் செல்கிறது. பெண்களை பொருட்களென பயன்படுத்தும் ஆண்களின் விரல்களை கத்தரித்துச் செல்கிறது,  அதேபோல,

கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.

என்ற வரிகள், கவிஞனின் உள்ளுணர்ச்சியை சல்லடையிட்டு அவனது தோல்விகளை அறிந்து எழுதிய வார்த்தைகள் அய்யா இவை.

இரண்டாவது கவிதையில் கவிஞரய்யா செயல்படுத்திய உத்தியாக   முதலில் தனக்கான கேள்விகளை கவிஞரய்யா தொகுத்துக்கொண்டு நான் முன்னமே கூறிய கவிதையின் கூறான ஒரு தொகுப்புத்தியை இதில் உருவாக்கியிருக்கிறார். சம்பந்தப்பட்ட கவிதையை அரசியலை, அரசியலமைப்பின் ஒரு தூணைத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எல்லா வார்த்தைகளிலும் ஒரு நவீனப் பார்வை நகர்ந்தபடியே உள்ளது. கவிதையின் தன்மைகள் இரண்டு தளங்களாக தன்னைப் பிரித்தபடியே செல்கிறது. 

ஒன்று கவிஞரய்யா  இரு கவிதைகளிலும் தனது பாணியாக கவிஞரய்யா  பேச்சுத்தொனியை மையமாக வைத்து பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் அவரது பாணியாக இரு கவிதையிலும் நீண்டு செல்கிறது. பத்திரிக்கையாளனை அவன் மொழியில் தாக்க கவிகளின்  வாக்கியங்களை அமைத்தததோடு இது வாசகனின் ஒரு சார்பை விளக்குகிறது.  இரண்டு கவிதைகளின்  எளிமை எவரையும் உள்ளே வரச்சொல்லக் கூடியது. உதாரணமாக

“பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை”

"நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்…"

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.


மற்றும்

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்

என்ற வார்த்தைகளின் பின்னால் தத்துவக்குறிப்புகள் சகல மையத்தினரையும் நிர்வாணத்தின் வெவ்வேறு திசை நோக்கி  வேறுபடுத்திக்காட்டுகிறது.மேலும் இரு கவிதைகளுமே சாபத்தின் தொனியை கொண்டிருக்கிறது. நிர்வாணத்தை சகலருக்கும் பொதுவாய் அதேசமயம் வெவ்வேறு உடல்களுக்கு விளக்கிக்காட்டுகிறார்.

நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது.

இவ்வரிகள் கவிதைக்கான மொழியை தன்வயப்படுத்திக் கட்டுக்குள் 
கொண்டிருக்கிறது. 

வணக்கம் அய்யா..









ஆத்மார்த்தி விமர்சனத்திற்கு முன் வைத்த கவிதை.





கற்பம் 
- ஆத்மார்த்தி

ஒரு பாடலின் இடையிசையாய் கழிந்துகொண்டிருக்கிறது காலம்.
.
முப்பத்து ஐந்தாவது வரி துவக்கத்தில்என் மடியில் தலைசாய்த்து மரித்துப்போனாள் வயலட் கலரிங் கூந்தல்காரி.
பாடலின் இரண்டாவது வரியிலேயே கள்ளப்பகிர்வுக்குப் பின் திரும்பிவந்தவள் ஏறெடுக்காமல் குளியலறைக்குப் போகிறாள்.
எட்டாவது வரியின் இரட்டிக்கிற வார்த்தைகளின் வழியாக கழுத்தைத் திருகிக் கொலை செய்த பாவத்தின் வீச்சம் வழிகிறது.
இருபத்து இரண்டாம் வரி ஒலித்து முடிக்கையில் உன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முதல் பல்லவி முடிந்து மீண்டும் முதல்வரி ஒலிக்கையில் உலகத்தின் ஒட்டுமொத்த வாதைக்குமான மருந்திடல் துவங்குகிறது.
சரணத்தின் மூன்றாம் வரியின் ஆறாவது வார்த்தை எல்லாக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாயிருக்கிறது.
சூன்யங்களின் பீடிக்கிற கரங்களனைத்தையும் வெட்டியெறிவதற்கான சூட்சுமம் எழுபதாவது வரியினுள் இருக்கிறது.
ஒப்புக்கொடுக்கிற தேவன்களின் மறைவிடங்களின் மீது ஒளி பாய்ச்சுவதாக எண்பத்தாறாம் வரி திகழ்கிறது.
எலும்புகளைப் பொசுக்கிக் கிடைக்கிற புகையெண்ணையின் மணத்தை தொண்ணூறாவது வரி கமழ்கிறது.
இரண்டாவது சரணத்தின் துவக்க வரியினுள் தேடல்களனைத்தும் முடித்துவைக்கப்படுகின்றன.
அதற்கடுத்த ஆயிரத்துப் பன்னிரண்டாவது வரியில் பூப்படைந்த பின்னரே உயிர்த்தல் நிகழ்கிறது.
சாவதற்குத் தயாரான கிழட்டுபொம்மைகளைக் கொன்றுவிளையாடும் பிள்ளையினங்களின் பேரொலி எட்டாயிரமாவது வரியில் வருகிறது.
பாக்கெட்டுக்களில் எல்லாவற்றையுமே காய்க்கிற ஒற்றை மரத்தில் அன்பின் பொட்டலங்களைச்சீந்துவாரில்லை என்ற குறிப்பு பதின்மூன்றாம்வரியில் தொனிக்கிறது.
மூன்றாவது சரணத்தின் ஒன்பதாவது வரியில் கடுக்கைக் கண்ணியனைத் தன் சடைபிரியொன்றில் தூக்கிலிட்டு நடனமாடுகிற குண்டலி எள்ளுகிறாள்.
நாப்பத்துமூன்றாயிரத்துப் பதினாறாவது வரியில் மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன நீர்தளத்தில்.
பத்தொன்பதாவது வரியின் கடைசிக்கு முந்தைய சொல்லில் அணைந்துகொண்டிருக்கிறது வானம்.
பூச்சியம் தவிர வேறொன்றுமில்லை.




அய்யா இவ்வரிகளில்  உங்களுக்கு என்னென்ன வார்த்தைகள்  எல்லாம் தெரிந்திருக்கிறது  என பட்டியலிட்டிருக்கிறீர்கள். இந்த பட்டியலிடும் அறிவு முதலில் கவிதைக்கு சற்று தொலைவாக இருக்கவேண்டும். கவிதையில் நிகழும் கவிஞனின் பலகுரல் தன்மையானது கவிதையை மேலோட்டமாக வாசிப்பவனுக்கு வேலையை அதிகமாக்குகிறது. அந்த பலகுரல் தன்மையை ஒரு உடனடி உண்பொருளாக வேலைத்திட்டமாக பயன்படுத்தமுடியாது. குறைந்தபட்சம் அதைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டுமானால் அதன் பல குரல் தன்மையை அடையாளம் கண்டு அர்த்தங்களை தயார்செய்யவேண்டும். அதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய புதிய பிரதியாக வாசிப்பவன் மாற்ற வேண்டும். இங்கு மேற்குறிப்பிட்டதில் இரண்டுமே நிகழாததோடு வெறும் வார்த்தைக்குவியலாய் தலை குப்புற நின்றுகொண்டிருக்கிறது.  இவ்வெறும் வார்த்தைக்குவியல்களை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் நாம் இதைக் கவிதையென்று சொல்ல முடியாது.


கவிதைக்கே உரிய சொற்கள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒரு வாசகாரக நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். ஆனால் எழுதும்போது அச்சொற்களை நீங்களே ஏதோ கண்டுபிடித்த விஞ்ஞானி போல் யுரேகா என்று குதித்து விடுகிறீர்கள். அய்யா பிரதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும். அதாவது நீங்கள் எப்போதும் முதல் வரியின் முதல் வார்த்தையிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை. இறுதியோ...இல்லை நடுவரியிலிருந்தோ கவிதை உருவாகலாம்.

ஆனால் நீங்கள் வார்த்தைகளை இடைவெளியில் கொன்று விடுகிறீர்கள். ஒன்று கவிதை எழுதுகிறபோதே அதை ஒரு வாசகனாக நீங்கள் இவ்வகைக் கவிதைகள் எவ்வகை வாசகனுக்கானது என்ற குறிப்பை உங்களது மனம் உணர்த்ததினாலும், அறிவகந்தை உங்களை ஒரு கவிஞர் என்று நம்ப வைத்து மேலும் சில வரிகளை எழுத வைத்துவிடும். ஒரு இடத்தில் கவிஞராக இருக்க வேண்டும் அதே சமயம் கவிதை எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும், அது மட்டுமல்லாது வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாயிருக்கிறது.

இந்த பெருந்தவிப்பே சொற்களை குறுக்கும் மறுக்குமாக உடைத்து இன்னும் ரகசியத்தைப் பேசும் ஒரு மொழிபோல் உங்களை செயல்படுத்தியிருக்கிறது. வாசகர்களை ஏமாற்ற நாம் நமக்குத் தெரிந்த பட்டியல்களை இடுவது ஒரு ஜிக் ஜாக் வேலையாகும். ஆனால் ஒரு விமர்சகன் தனது வாசிப்பின் மூலம் உடைப்பது முதலில் இந்த ஜிக்ஜாக்கைத்தான். அதனால்தால் கவிதை காலியாகவும் செய்கிறது.

கவிதையின் நவீன வடிவம் இதுவாகத்தானிருக்கும் என நீங்கள் நம்பிய வடிவத்தை உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை வைத்து விளையாண்டிருக்கிறீர்கள். ஒரு குழந்தை அழுவதை ரசிக்க முடியும். அதற்காக அழவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது. நீங்கள் உங்கள் வரிகளை வைத்து வேடிக்கை காட்டுகிறீர்கள். வேடிக்கை காட்டுவதை நம் ஊரில் வித்தை காட்டுவதாகத்தான் சொல்லுவார்கள். நீங்கள் காட்டும் இந்த வேடிக்கை வெகுவாக பல தமிழ் கவிகள் காட்டுவதுதான்.

ஆனால் அதில் பெரும்பாலோர் வேடிக்கை காட்டி யாசகம் கேட்டு அலுமினிய வார்த்தைகளை நீட்டுவார்கள். ஆனால் நீங்கள் உழைக்கிறீர்கள், கவிதைக்காக அதன் மொழிக்காக வார்த்தைகள் கைவரப்பெற நீங்கள் உழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியாக உழையுங்கள். பலன் உண்டு. மேலே நீங்கள் எழுதியதை கவிதை என்று தயவுசெய்து நம்பாதீர்கள், அது நீங்கள் உழைக்க வேண்டிய பொழுதுகளைத் தின்று மென்று துப்பிவிடும். நவீனத்துவத்தோடு இணையாததனைத்தும் கொல்லப்படுகிறது. ஆனால் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன.கவிஞனின் தன்னிலை  ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல...அதுவும் எல்லா மனிதர்களைப் போலவே அவனும் முரண்பாடுகளின் ஒட்டுமொத்தக் கூறுகளைக் கொண்டவனே.அது குறித்து நாம் நீங்கள் அனுப்பிய இரண்டாவது கவிதையில் பேசுவோம்.


ஓவியத்தில் தெறிந்த 
இந்திரியம்
நீந்தும்
குழந்தைகள்
பெயரற்ற தேசம்
பீங்கான்
கருவரை
கற்பம்
தரி
சிதை
பெயரழித்தல் ஒரு வகைச் சமன்பாடு.

- தீர்த்தமுனி