Friday 9 January 2015

யாத்ரா



நடுநிசி

பலன் பார்க்கும் பழக்கமுண்டாவென
தலையில் விழும் பல்லி
பூனையின் இருப்பை
பரிசோதித்துச் செல்லும் எலி
புணர்ச்சி நிமித்தம்
அலையும் நாய்கள்
உறக்கம் தொலைத்த இரவில்
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
அப்பா
அம்மாவின் புருஷன்
இத்தனை காலமாய்
இதுகூட

தெரியாமலிருந்திருக்கிறது.

Tuesday 6 January 2015

கண்டராதித்தன்



புகைப்படத்தில் புறாவின் முட்டையைத் திருடுபவன்

ஒரு புறாவின் முட்டையை நான்
திருடிக்கொண்டிருப்பது போன்ற
புகைப்படம் இன்று அஞ்சலில் வந்தது

பரிதாபமான எனது கண்கள்
அப்போது முட்டையைப் பார்த்துக்
கொண்டிருக்கவில்லை.

புறாவின் முட்டையை வைத்து
ஆகவேண்டிய காரியம் ஏதும்
எனக்கிருக்கவில்லை

முட்டையைத் திருடுவது போல
நடித்துக்காட்டும் புகைப்படமென்றும் கூட
யாரும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை

கெட்ட எண்ணத்தோடு அனுப்பப்பட்டிருக்கும்
இந்தப் புகைப்படத்தால் புறாக்களையோ
என்னையோ விரும்பாத ஒருவனை
யூகிக்கமுடிகிறது

எனக்கும் புறாவிற்கும்
யாதொரு தொடர்பும் இல்லையென்பதை
விரும்பாத அந்த ஒருவனை
இப்போது அலட்சியப்படுத்துகிறேன்

நிச்சயம் இது தெளிவாக்கப்பட
வேண்டிய விசயம்

எங்கும் அலைந்து திரியும்
புறாவொன்றை நிறுத்தி
நிச்சயம் நான் ஒரு புறாவின்
முட்டையைத் திருடுவது போன்ற
இந்தப் புகைப்படத்தைக் காட்டி
சொல்லத் தொடங்கினேன்
எந்த சூழ்நிலையிலும்
உங்களுக்கோ

உங்களின் முட்டைகளுக்கோ…

Wednesday 31 October 2012

கண்ணீருடன் விடை பெறுகிறேன்.





வாசகக் கண்மணிகளுக்கும். என் உயிரினும் மேலான கவிச் செல்லங்களுக்கும்.

மொகநூல் வழியா உருண்டோடி நாளைய உலகை ஆளக் காத்திருக்கிற முகநூல் கவிஞருங்களுக்கு. நான் மறுபடியும் போறேன்.  உங்க கொடுமைய என்னால தாங்கமுடியலை.வாங்கன்னு கூப்பிடுறீங்க. வந்து பேசுங்க தீர்த்தமுனி கேட்கிறோம்னு சொல்லுறீக.வந்தா பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம். பேஸ்தடிச்சுப் போயி கிடக்கிறீக. நான் போறேன்னு சொன்னேன் போய்த்தொலையுறேன்னும் சொன்னேன். கேட்கலை.

உங்ககூடப் பேச அன்பா இருக்குது உங்க விமர்சனத்த பண்ணுங்க நான் என் காது கொடுத்துக் கேட்கிறேன் பேசுங்க முனி... பேசுங்க தீர்த்த முனின்னு சொன்ன அய்யா நேசமித்ரன் மித்ரா கிட்ட நீங்க கவிஞருங்களா அய்யான்னு கேட்டா,  என்னைக் கவிஞருன்னு அண்ணன் ராசு மற்றும் நண்பர் மாணிக்கம் அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா இன்னும் உற்றார் உறவினர் மற்றவர்களும் சொல்லுறாங்கன்னு சொன்னாரு. என்னைக் கவிஞருன்னு  என் ஒண்ணுவிட்டச் சித்தப்பா சொன்னாருங்கிறாருங்க. இந்தக்கொடுமைக்கு நான் மருந்தக் குடிச்சுத்தான் சாகணும்.

சரி இருக்கட்டும் வெமர்சனமும் அதுவும் ஒண்ணுதான். இதுமட்டுமா சொன்னாரு அதுக்கும் ஒரு படி மேல போயி அய்யா மித்ரனார் நான் தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன்ன்னு எடுத்துத்தொடுத்து, நீங்க வாங்க நாம கவிதையப் பேசலாம் வெமர்சனம் பேசலாம்னு சொன்னாரு.சொன்னவரு சொன்னவருதான். அய்யாவ ஆளையே காங்கலை. எங்க போனாரோ.அவரு பக்கத்துல போயிப் பார்த்தா தஸ்யூஸ்ங்கிறாரு.கிஸ்மிஸ்ங்கிறாரு.நான் கேட்ட கேள்விக்கு பதிலக் காணோம். ஆனா காமெடியா இருக்கு. இடையில அமானுஷ்யம் நீ செய்யுறத உருப்படியான வெமர்சனம் இல்லேம்பாரு ஆனா அவரப் பண்ணு வெமர்சனம் ஏய் இவரப்பண்ணு வெமர்சனம். அய்யாஆஆஆஅ.....

போதும் சாமி நீங்க உங்களுக்குள்ளேயே பொலம்பிட்டுக் கிடங்க.நான் போறேன். இனி எந்த வாசகக் கண்மணியோ இல்லை கவிச் செல்லங்களோ கூப்பிட்டா நான் வரமாட்டேன்,. போறேன். போறேன்னு சொல்லாதீங்க போயிட்டு வாரேன்னு சொல்லுங்கன்னு நீங்க சொல்லுறது என் காதுல ஏறுது. சரி இப்பப் போறேன்.

ஆனா போறதுக்குக் காரணம் சொல்லணும்ல சொல்லாட்டத்தான் பயமான்னு கேட்டுப்போடுறாக.ஆனா நான் கேள்வி கேட்டு பதில் வராம அவங்க இருக்கிறதுக்கு பேரு அஞ்சா நெஞ்சுரம். கவுத வரிச்சரம். இதுவரைக்கும் உரைக்கிற மாதிரி ஒரு ஆளும் பதில் சொல்லலை. அதனால போறேன். போறதுக்கு காரணம் இதுதான் மொகநூலார்களே.மொகநூல் கவிஞருங்களே.

உங்களுக்குன்னு என் சொந்தச் செலவுல பதிமூணு நாளுல கவுத எழுதுவது எப்பிடின்னு ஒரு பொத்தகத்த எழுதப் போறேன்.அதுக்கு நீங்க விடைகொடுக்கணும்.வெமர்சன வடை இப்போதைக்கு இருக்காது.நான் கிளம்புறேன் கிளம்புறேன். உங்க ஆஷை முகத்தையெல்லாம் மொகநூல்ல கண்டு ருசிச்சுச் சாப்பிட்டேன். அந்த ஆஷை வதன முக அழகையெல்லாம் பொத்தகத் திருவிழாவுல உத்து உத்துப் பார்ப்பேன்னு நினைக்கிறேன்.நீங்கதான் ஆளுக்கொரு அழகு சிந்துறமாதிரி,பேனாப் புடிச்சு விட்டத்தப்பார்த்தமாதிரி, நெட்டுக்கப் படுத்து, கொட்டத்தப் பார்த்தமாதிரி,மரக்கட்டைல தோதா உடம்பவளைச்சு உத்துப்பார்க்கிற மாதிரி டிசைன் டிசைன்னா உங்க  கொழுத்த வதனங்களைப் பதிச்சிருக்கீகளே. மறக்கமுடியுமா.

மறக்காம பொத்தகத் திருவெழாவுக்கு வந்திருங்க.இவகதான் அவக அவகதான் இவகன்னு எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டச் சொல்லி உங்ககிட்ட கைச் சாத்து வாங்கணும். பல்லத்தனையும் தெரியுற மாதிரி ஹி ஹின்னு கைச்சாத்தப் போடுங்க. கைவலிக்கும்னு நினைக்கிறவக ரப்பர் ஸ்டாம்பு கொண்டுவாங்க.ஆனா மொகநூல் கவிஞருங்களே அய்யா நீங்க கவிஞருங்களா அய்யா ன்னு யாராவது கேட்டா மட்டும் தலைதெறிக்க ஓடிப்புடாதீக.எனக்கு பெரிய சங்கடமாப் போயிரும் ஆமா, பார்த்திக்கிடுங்க..

தீர்த்தமுனியின் வெமர்சனக்கடை பட்டப்பகல் பதினாலு மணிக்கு சாத்தப்படும்.வேகமா ஓடிவந்து நான் எழுதுனது கவுத.நான் கவிஞருன்னு சொல்லுறவக லிஸ்டப் போட்டுச் சொல்லுங்க. மைண்ட்ல வச்சிக்கிறேன்.

கடைய மூடிட்டா இனி தொறக்க மாட்டேன். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி  மூணு மாசம் கழிச்சுதான்  வருவேன் பிப்ரவரி 2013 ல. சரிங்களா மொகநூல் கவிஞருங்களே.
மூட்டையக்கட்டுறேன்.


ஜிஜ்ஜினக்கா சின்னக் கிளி
சிரிக்கும் பேஸ்புக் கிளி
மேடையிலே ஓடி வந்தார் கவுத பாட
கவுத பாடும் வேலையிலே கம்பெடுத்து
தீர்த்தமுனி விட்டுப்போட்டு ஓடிப்போனார் கூட்டத்தோட

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல
நான் எழுதுறேன் எழுதுறேன் கவுத வல்ல

……..ஙே… அஹ் அஹ் அஹ்
……..ஙே…. இஹிக் இஹிக் இஹிக்…

வணக்கம் வந்தனம் நமஸ்காரம் ஸ்வாகதம் கும்புடுறேன் சாமி.

அய்யா திருமிகு நேசமித்ரன் மித்ரா அவர்களுக்கு





அய்யா எனது வரவில்லாமல் போனதால் தாங்கள் வருத்தமடைந்து எழுதிய பதிலைக் கண்டேன் அய்யா. உங்களுக்காகவாவது சில விமர்சனங்களைச் செய்ய கடமைப்பட்டவன் ஆகியிருக்கிறேன் அய்யா.


இப்படித்தானய்யா ஒரு ஆரம்பகட்ட விமர்சகனை வாழ்த்தி வரவேற்று பரவசமளித்து உற்சாகப்படுத்தவேண்டும். உங்களது அன்புக்கு எனது விறைப்பெடுத்த சல்யூட் ஒன்றை வைக்கிறேன். அய்யா எனது விமர்சனங்களில் அடிக்கடி அய்யப்ப மாதவர் புலம்புவதும், நீங்கள் இப்போது சொல்லுவதும், இன்னும் எண்ணற்ற முகநூல் கவிஞர்கள் அய்யோ, அம்மா கொல்லுறான்…கொல்லுறான் என அலறுவது ஒன்றே ஒன்றுதானய்யா, நான் தனிமனித தாக்குதல் செய்திருக்கிறேன். இதைத்தானய்யா உளறி வருகிறார்கள். அய்யா நீங்களாவது அன்பு கூர்ந்து எனது விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் இருந்தால் ஒரு வார்த்தையைச் சுட்டுங்கள் அய்யா…தாழ்பணிந்த மன்னிப்பை மனமுவந்து கேட்பேன் அய்யா. அய்யா பெட்டைப் பயலுக்கு லைக் இட்ட நீங்கள் பின் அதை நீக்கியது உங்களது மாண்பைக் காட்டுகிறது அய்யா. இதற்கு அய்யப்ப மாதவர் குமுறிக் கொந்தளித்து காத்துவிடுவதும் செவிகளுக்கு விருந்தாகிறது அய்யா.

அய்யா நீங்கள் சொல்லியபடி தமிழில் கவிதை விமர்சகர்கள் தம் மேலான நேரத்தையும் உழைப்பையும் ஈந்து தொண்டாற்றுவது வரவேற்கத்தக்கது . ஒரு கவிதையை கவிதை அல்ல என்று சொல்ல ஒரு வாசகனுக்கு முழு உரிமையும் உண்டு . தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன். இந்த நம்பிக்கையை ஆளுக்கொரு வாய் ஊட்டிவிடுங்கள் அய்யா.

//மேற்குறிப்பிட்டபடி தனிமனித அவதூறுகள் ,தாக்குதல்களை வெறுக்கிறவனாகவே துவக்கம் முதல் உள்ளேன்//

அய்யா, இதைத் தாங்கள் அடிக்கடி கண்ணியமான குரலில் ஒரு நல்ல நுவலென சொல்லி வருகிறீர்கள். ஆனால் அந்த ரியாஸ் குரியான இருக்கிறதே அது லூசா என்று கேட்டதும் உங்களின் மிருக குணம் சட்டென முட்டைக் கண்ணை விழித்துப்பார்த்து அது சொன்ன தனிமனித அவதூறானா லூசா அய்யா என்பதற்கு லைக்கைப் போட்டு விடுகிறதய்யா…

அய்யா உள்ளே மிருகம் இருக்கிறது, சற்று அதட்டி வையுங்கள் அய்யா. நினைவில் மிருகமே உள்ள மனது, கடித்து வைப்பதோடு, குதறி வைக்கும் அபாயமும், ஆபத்தும் ஒருங்கே இருக்கிறதய்யா, உடனே நீக்கிவிடுங்கள். இதை உங்களுக்கு மட்டுமல்லாது உடன்பாடோடு லைக் இட்ட தனிமனித அவதூறை பழுது நீக்கி வெறுப்பவர்களான அய்யாக்களும், இது சின்னப்பய விசயமப்பா என பதில் ஏதும் சொல்லாத அண்ணன் ராசு மற்றும் நண்பர் செல்வம் இன்னும் தூரத்து உறவு வாசு தேவன் அய்யாக்களுக்கும் அறிவிக்கிறேன் அய்யா.

அய்யா இந்த ரியாஸ் குரியான இருக்கிறதே ரியாஸ் குரியானா..அது பொதுச் சுவற்றில் கழியும். பின் தனியே பெட்டிச் செய்தியில் வந்து மன்னிப்பு என்கும். கோபித்து விசர் பிடித்து என்னைத் தடை செய்யும். பின் கொஞ்சிக்கொண்டு காலைக் கட்டும். அது ஒரு காமெடி பீஸ் அய்யா.

அய்யா இதுகளை விடுங்கள். தனிமனித தாக்குதலை செய்யமாட்டேன் நான் உத்தமர் என்று உரைத்த நீங்களே அது லூஸா என்றால் அதற்கு லைக் இடுகிறீர்கள். அதிலும் பாருங்கள் அது ஒரு பிரதிக்கவிஞர் என தனக்குத்தானே தனது வாயில் புலம்பிக் கொண்டிருக்கிறது. அய்யா அது சொல்வதைக் கவனியுங்களேன். அய்யா சற்று நின்று பொறுமையோடு கவனியுங்கள். அந்த முற்றும் தெளிந்த தெளிவு உரைப்பதைப் பாருங்கள்.

அது சொல்கிறது...

// நேசமித்திரனின் கேள்வி முக்கியத்துவம் மிக்கதாகத் தோன்றவில்லை.அதற்கு உங்களின் பதில் பொறுப்பற்றது.//

என்னய்யா இது கொடுமை. முக்கியத்துவம் இல்லாத கேள்வியாம், ஆனால் நான் பொருப்போடு வந்து பருப்பெடுக்க வேண்டுமாம். எனது கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் முக்காடு போட்டு என்னை தடை செய்த அது, இப்பொழுது முக்காட்டை நீக்கி திருட்டு முழி முழிப்பது ஏனோ அய்யா. முக்கியமில்லாத கேள்விக்கு பொறுப்பான பதிலைக் கூறு எனச் சொன்ன அது லூசு எனப் பேசுவது எந்தப் பொறுப்போடு அய்யா.


அதோடு மித்ரனய்யா தாங்கள் எனக்கு அன்பு கூர்ந்து நல்ல விமர்சனம் இது கெட்டவிமர்சனம் இது நடுநிலைமை ஓர நிலைமைகளை எல்லாம் நான் பொருப்படுத்தியே பதில் சொல்கிறேன் அய்யா எனது கவிதை குறித்த விமர்சனங்கள் எனது வலைத் தளத்தில் உள்ளதய்யா


கவிதை பற்றி நான் உரையாடிய சான்றுகள்;

1 நவீன கவிதையிலிருந்து தப்பிக்க… அய்யாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பாலற்ற மாந்தர்களுக்கும்…..

2 கவிதையில் கனவு என்பது நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையுமல்ல உணர்ச்சியுமல்ல.ஆனால் அது கனவு சாராத தடையற்ற தொடர்புகள் ஆகும். கனவில் உள்ள …

3 சலனங்களின் வரைபடமாக இக்கவிதையைச் சுட்டுகிறேன்.

4 வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....

5 கவிஞர்- ஆத்மார்த்தியின் வருடும் சலங்கை - யை விமர்சித்து

அய்யா இது சாம்பிள்களய்யா இன்னும் இது போன்ற பல தலைப்புகளில் எழுதியிருக்கிறேன். நான் கவிதைகளாக் கருதுபவையென அகநாழிகை வாசுதேவன் தொடங்கி பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதியென சில கவிதைகளையும் இட்டுள்ளேன் அதிலும் உங்களுக்கு விமர்சிக்க ஏதேனும் இருக்கலாமய்யா. தாங்கள் சற்று சிரமம் பாரது வருகை தந்து எனது விமர்சனங்களில் ஒளிந்துள்ள தனிமனித அவதூறுகள், இன்னும் காய்தல் உவத்தல் நடுநிலைமைகள் இவைகளைச் சுட்டினால் ஒரு ஆரம்ப கட்ட விமர்சகனான எனக்கு அது உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அய்யா.
அய்யா நான் நீங்கள் கவிஞராய்யா எனக் கேட்டதற்கு நண்பரும் அண்ணனும் என்னைக் கவிஞர் என்று சொல்லுகிறார்கள் என பதில் நுவல்ந்திருக்கிறீர்கள் அய்யா…நண்பர் அண்ணன் பெரியப்பா சித்தப்பா அவர்களது உடன்பிறந்தவர்களிடம் நான் கேள்வி கேட்கமுடியுமாய்யா. நான் கேள்வி கேட்டது உங்களிடம் அய்யா. இப்பொழுதாவது சொல்லுங்களய்யா நீங்கள் கவிஞரா அய்யா.

பொறுப்போடு பதில் சொல்லுவதோடு, அடிக்கடி எனக்கு விமர்சகப் புத்தி இப்படி இருக்க வேண்டும் என உரைத்ததைப் போல நானும் விமர்சகனாய் கவிதை எப்படி என எனது வலைப்பக்கத்தில் உரைத்திருக்கிறேனய்யா. பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் சொன்ன காய்தல் உவத்தல் இன்னும் பழுத்தல் இருந்தாலும் வாங்கிக்கொள்கிறேன் அய்யா லூசா என்பவருக்கு லைக் இடும் உங்களது உள்ளம் மிக டைட்டாக இருக்கலாம். மனதைச் சற்றுத் தளர்த்தி நீங்கள் கவிஞரா அய்யா என்ற கேள்விக்குப் பதில் சொன்னால் மிக பதமாக அன்பாக எனது விமர்சனங்களைச் சுட்டுவேன் அய்யா.
நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு எனது மாமா பதில் சொல்லிவிட்டார் என்றால் உங்களுக்கு வருத்தம் வருமா வராதா அய்யா...

அய்யா உங்களது வலைப்பக்கத்தின் தலைப்பு நேசமித்ரன் கவிதைகள் என உள்ளது அய்யா… நீங்கள் கவிஞரா அய்யா என்பதை ஒரு சிறு வேண்டுகோளாகக் கொள்க, அய்யா இக்கேள்விக்கு அண்ணன் ராசு, மற்றும் அருமை பெரியப்பா, சிறுமை சித்தப்பா, பக்கத்துவீட்டு நண்பர் இவர்களைக் கூப்பிடாமல் நீங்களே உங்கள் அன்புவாய் திறந்து அருள் பாலியுங்கள் அய்யா. நல்ல நுவல்தல்களை நானுரைப்பேன் சத்தியத்தோடு. ஏனென்றால் அய்யா நீங்கள் இரு கேள்வி கேட்டு பதில் அளித்தவன் நான் என் ஒரு கேள்விக்காவது பதில் சொல்லும் கடமைப்பட்டவர் நீங்கள்.( அய்யா, நான் தானய்யா தங்களிடம் முதல் கேள்வி கேட்டேன் இன்னும் பதில் தகையவில்லை. இதற்கிடையில் நீங்கள் இரு கேள்விகளை வைத்தீர்கள் நான் பதில் சொல்லியிருக்கிறேன்.)

அய்யா முகநூல் கவிஞர் என்றதும் அதை அசிங்கமாக நினைத்துப் பதறி இன்னும் உள்ளுக்குள் புழுங்கி அசிங்கத்தை உளறிய அய்யப்பமாதவர் எனக்கு இன்னும் நாலு வரி பதில் எழுதாமல் காக்கா தவளை எனப் பேசுவதோடு

பார்க்கும் இடமெல்லாம் தீர்த்தமுனி
உன் பேரைக் கண்டால் பதறுதடா தீர்த்தமுனி
உள்ளம் பதறுதடா…
கவிதை கசக்குதடா
முனி காலி செய்தாயடா

எனப்பதறி இன்னும் தனது பக்கத்தில் பெட்டைப்பயல் என அந்த ஆம்பளைப் பயல் சொல்லி வருகிறது. அதற்கும் நீங்கள் அன்பாய் பேசுவது எப்படிக் கனிவாய் பேசுவது எப்படி என ஒரு பாடம் நடத்துங்கள் அய்யா. அதை நான் எதிலோ மிதித்துவிட்டது போல் குரைத்துத் திரிகிறது. அப்புறம் அய்யா உங்களது கவிதைய ஏற்றுக்கொண்ட ராசு அண்ணன் மற்றும் நண்பர் இன்னும் செல்வன் மற்றும் ஏனையோருக்கு உங்களது கவிதைகளை எப்படி கவிதைகள் எனச் சொன்னார்கள் என்பதை தீர்த்தமுனியின் வானொலியிலிருந்து விமர்சனச் சேவை செய்ய அமைதியோடு காத்திருக்கிறேனய்யா. அவர்களும் கவிதைதான் அது என விளக்க வேண்டும்.

அய்யா அண்ணன் ராசுக்கு.
நீங்கள் இடையில் ரெண்டு வரியை பிராய்ஞ்சு போட்டு இது கவித கவித என்றால் நானும் இன்னும் பல வரிகளை பிராய்ஞ்சு கவிதையே இல்லை எனப் பேசி நிரூபித்து, கட்டிய மனக் கோட்டையை உடைக்க முடியும் அய்யா. பேசலாமா அய்யா…

அய்யா செல்வம் மாணிக்கமய்யா
காசு வாங்கிட்டு கவிஞ கவிஞ.. கவுத கவுதன்னு கூவுறது மாதிரியேக் கீதே…ஆவ்வ்வ்வ்வ்.ஜிவ்…பவ்..மண் கவ்...

ரியாஸ் குரியானா…தெளிவாக்கீதா..

மாட்டுத்தலை அமானுஷ்யருக்கு…ச்சீ…போ


அய்யா மித்ரனய்யா நீங்கள் விமர்சகர்கள் குறித்து சொன்ன பல வாக்கியங்கள் எனக்கு உங்களுடன் உரையாடும் தகுதியை நான் இழந்து விட்டதை தெரிவிக்கிறது என்று நான் கூறமாட்டேன். எனக்குப் பேசுவதற்கு நிறையப் பிடிக்கும். பேசுவோம் அய்யா

திருமிகு நேசமித்ரன் மித்ரா அய்யா…எனது கேள்வி ஒன்றுதானய்யா. நீங்கள் கவிஞராய்யா?பதில் சொன்னால் உங்கள் வருத்தங்களை போக்கி நான் பேச மகிழ்ச்சியான அன்போடு வருவேன் அய்யா….
அய்யா உரையாடலாம் அய்யா...

Tuesday 30 October 2012

அய்யா அமானுஷ்யபுத்திரருக்கு





போய்யா போ

நான் ஒரு கெட்டவன்
நான் பீடி பிடிப்பவன்
            நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டுப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலை பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேண்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்‌ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரச மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை பிளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
……………………………

யார் கெட்டவன்
யார் நல்லவன்

அவ்வளவுதானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.


அய்யா அமானுஷ்ய மாட்டுத்தலையரே மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இப்பொழுது நித்தமும் சுற்றிச் சுழல்வது ஆத்மநாம் கவியுலகின் அடிப்பரப்பிலய்யா. ஒரு கள்ளப் பூனையை நான் சுற்றி விளக்க  வேலை செய்ய வேண்டுமாவென யோசித்தேன்.

இந்தச் செறுப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறீர்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு

இது முதல் தொடங்கி அவர் பின்பற்றி அடியொற்றி வந்த அவர் அது குறித்து எங்காவது சொல்லியிருக்கிறாரா அமானுஷ்ய புத்திரரே.சொல்லுங்கள். நீங்கள் அவரது வெறிகொண்ட ரசிக ஆத்மா என நினைக்கிறேன்… இப்படியே நிறைய அள்ள அள்ளக் குறையாத செல்வமாய் அவரின் கவிதைகளை பொங்கி வரும் காவேரியாய் கொத்திக் குதறிக்கொண்டு போன உங்கள் ம.புவின் கவிதைத் தொனித் திருட்டைச் சொல்லிக்கொண்டு போகலாம் அய்யா.


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதிலே ஒரு நிம்மதி

என்ற வார்த்தைகளின் பின்னால் உயிர்ப்புற்று விளங்கும் கவிதையின் ஆழ்மனதைத்தான் இப்பொழுது கள்ளச் சந்தியில் வரிகளாகவும் தொனிகளாகவும் பிய்த்து பிய்த்து விற்று வருகிறார். இன்னும் சொல்லலாம் அமானுஷ்ய புத்திரரே..

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                        ஒரு கட்டிட வரைபடத்தையும்
ஒரு சாலை விவரக் குறிப்பையும்
ஒரு பெண்ணுக்கு காதல் கடிதத்தையும்
ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை

………………….
…………………

அய்யா அமானுஷ்யம்…நீங்கள் பதில் சொல்லுங்கள் அய்யா. கொந்தளித்து குமுறிய உங்களது கவிஞர் ம.பு.பதில் சொல்லுவாரோ…

எங்கோ பார்த்த முகம்
எங்கோ பார்த்த கண்கள்
எங்கோ கேட்ட ஒலி
எல்லாம் எங்கோ
எங்கெங்கோ


அய்யா அமானுஷ்யம்…புரிகிறதா அவர் என்ன மாதிரியான வரிகளையும் தொனிகளையும் கவிதையின் சரக்கையும் கைமாற்றுகிறார் என்று. அய்யா இபொழுது ஆத்மநாமை எடுத்து வாய் விட்டுப் படியுங்கள். அவரது சொற்கள் சப்தங்களாய் உங்கள் காதில் விழும்போது நீங்கள் அடையும் அனுபவத்தை சொல்லில் விளைந்த அந்த சொர்க்க அற்புதத்தை பதிலாய்ச் சொல்லுங்கள். அப்படியே ம.பு வின் செயற்கையான சத்தத்தையும் நீங்கள் காதுகளை மூடிய அனுபவத்தையும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்….

அய்யா அமானுஷ்யம் சிந்திப்பீர்!!! செயல் புரிவீர்.!!! நிந்தை மறந்து, சிந்தை மறக்காது  நித்தமும் வாசியுங்கள். புத்தம் புது பூக்கள் மலரட்டும் நித்தம் நூறு புன்னகை மலரட்டும்.

அன்புகனிந்த
தீர்த்த முனி.

Saturday 27 October 2012

முகநூல் கவிஞருகளுக்கு.







நான் கவிதை குறித்துப் பேசிய வரையில் முகநூல் கவிஞர்களின் ஓலம் பெருகிவிட்டது.  நீங்கள்கவிஞரா அய்யா  என்ற கேள்வியைக் கேட்டாலே கண்ணீரோடு பதட்டமும், நீங்கள் எழுதியது கவிதையா அய்யா என்று கேட்டால் உளறிக்குழறிப் பம்மும் நிலைக்கும் அது சென்றுவிட்டது. இவர்களிடம் பேசவே எனக்கு பரிதாபமாக இருக்கிறது.எனது விமர்சனச் சுட்டலை  கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போடுகிறேன். வணக்கொம்...கவிஞக் கண்மணிகளே....வணக்கொம்...எப்படியும் திரும்பி வர  மூணுமாசம் ஆகும்னு நினைக்கிறேன்..பொத்தகத் திருவிழாவுல கவிஞருங்க முகத்தையெல்லாம் முகநூல்ல போட்டிருக்கிற போட்டோ மாதிரி பேனா நோட்டோட இருக்குதான்னு பார்க்க ஆவலா காத்திருக்கேன்…

அய்யா வந்தனமாம் வந்தனம்
வந்த கவியெல்லாம் குந்தனும்
நான் வரும்போது வாங்கியாந்தேன்
நல்ல நல்ல விமர்சனம்
அய்யா கவிகளே
வந்தனமய்யா வந்தனம்.

வணக்கம் நமஸ்காரம்,ஸ்வாகதம்
கும்புடுறேன் சாமி.
போய்த்தொலைகிறேன்.


அன்பு கனிந்த
- தீர்த்தமுனி

Thursday 25 October 2012

ஆம்பளைப் பயல் அய்யப்ப மாதவனுக்கு.





தீர்த்த முனி என்கிற கோழையை எத்தனைபேர் உங்கள் நட்பு உறவில் முறித்திருக்கிறீர்கள். வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் போலியான பெயர்களைக்கொண்டு வளர்ச்சிக்குத் தடைபோட முயல்கின்றனர். யாவரும்.காமின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தீர்த்தமுனியென்பவன் விரைவில் பிடிபடுவான். அவன் முகத்திரை கிழியும் காலம் நெருங்கிவிட்டது.


- அய்யப்ப மாதவன்


அய்யா அய்யப்பமாதவரே.
ஒருவரும் நீக்கவில்லை என்றதும் ஏனய்யா இப்படிப் புலம்பித் தள்ளுகிறீர்கள். எனக்கு வாய்த்த நண்பர்கள், நல்வரவுகள் அப்படி. உங்களைப் போல ஒரு மூன்றாந்தரத்திலும் கேடுகெடுட்ட நான்காம்தரமாய் இருப்பதை விட கோழையாய் இருப்பது மாபெரும் வரமய்யா.. உங்கள் பிரச்சினை புரிகிறது மாதவரய்யா. உங்கள் கவிதையை நான் பொருட்படுத்தவில்லை என்பதுதானே.


காக்கா, தவளை
நான் அமைதியாய் இருக்கிறேன்
பொழுது விடிந்துவிட்டது.

நான் கத்திக்கொண்டிருக்கிறேன்
காக்காய் அமைதியாகி விட்டது

டக்கால்டி
டிக்கால்டி...

இதே பாணியில் தினமும் உளறி..ச்ச்ச்ச்ச் பாவமய்யா நீங்கள் பரிதாபமாக இருக்கிறது. அந்தோ பரிதாபம்.என் வாழ்வில் காணா பரிதாபம்.

நீங்கள் கவிஞர் என நம்பி காரியம் ஆற்ற நினைப்பது எதனால்.

அய்யா ஆம்பளைப் பயலாரே.. பெண்களிடம் எளிதாக சுகம் கிடைபவன், பெட்டைப் பயல் என்று நீங்கள் சொன்னதிலிருந்து உங்களது முகமூடியல்ல முகமே கிழிந்து பல நாட்களாயிற்று. நீங்கள் பெண்களையும், கட்டிய மனைவியையும் எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள், திருநங்கைகளை எவ்வளவு கேவலமாக எண்ணுகிறீர்கள் என்பது புலப்பட்டு விட்டது.இவ்வாறு இழித்துப் பேசி தராதரம் இன்றி நடந்த உங்களை தடை செய்யாமல் நண்பர்கள் இருக்கும் காரணம் நீங்கள் கவிஞர் என்பதால் இல்லை. உங்கள் மேல் அவர்கள் பரிதாபப்படுவதுதான். அது உங்களுக்குப் புரியவில்லையா அய்யா.அவர்களிடமே கேளுங்கள் அய்யா.


தவளை போல் தாவமட்டும் அல்ல...தவளை போல் கூச்சலும் இடுவது எதற்கய்யா...இப்பொழுது கேட்கிறேன்...உமது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனைவியிடம் எளிதாக சுகம் கிடைப்பவர்களா...அப்படிக் கிடைத்ததனால்தான் உம்மை கவிஞர் எனக் கூறுகிறார்களா..அப்படிக் கூறினால் அந்த ஆம்பளைச் சிங்கங்கள் பெயர்கள் எல்லாம் வாழ்கவய்யா...நான் பெட்டைப்பயலாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு மகிழ்ச்சிதான் அய்யா.

அய்யா யாவரும் காம் என்றால் என்ன.  யாவரும் ஆம்பளைப் பயல்கள், மனைவியிடம் எளிதாக சுகம் கிடைத்தவர்களா அய்யா.


அய்யா வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறீர்களே அய்யா...உங்களுக்கு எதய்யா வளர்ந்திருக்கிறது.மோசமய்யா மோசம்.வேஷமய்யா வேஷம்

ஏதாவது ஒரு வேஷத்தைப் போடுங்கள் மிஸ்டர். பல வேஷம்.

அய்யா எனது நட்புப் பட்டியலிலிருந்து விலகியவர்கள் சுதீர் செந்தீல் என்பவர். அவரும் என்னை தடை செய்யவில்லை. பட்டியலில்தான் இருக்கிறார். பிறகு மனோமோகன் என்பவரைக் காணவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் யம்மாடி ஆத்தாடி என மூச்சிரைக்க ஓடிய ஓட்டத்தை தொடங்கி வைத்தது அய்யப்ப மாதவன். இரண்டாவது ஆத்தா மார்த்தி. உங்களை நான் பொருட்படுத்தவேயில்லை. யார் சொன்னார்களோ உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பெட்டைப்பயல் என்றீர்கள், அதற்கு பதில் கொடுத்து விட்டேன். அடுத்து ஆத்தா மார்த்தி. பாவம். ப்ச்....

அய்யா நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நாம் கவிதை குறித்து விவாதிப்போம். நான் தயாராக இருக்கிறேன். சும்மா ஒளிந்துகொண்டு.மொள்ளமாறி, பெட்டைப்பயல் என உளறி வைக்காதீர்கள். உங்களுக்கு கவிதை மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாம் விவாதிக்கலாம். தயாராகத்தான் இருக்கிறேன். இல்லை இதுவரை நான் செய்த விமர்சங்களில் பிழை இருக்கிறது, அது சரியில்லை இது தவறு  எனச் சுட்டிக்காட்டுங்கள். அதையும் பேசலாம், பிளாக் செய்துவிட்டு மறைந்து இருந்து உளறுவது. மிக மோசமய்யா.


ஆத்தா மார்த்தி சொல்லி, நீங்கள் ஹேக் செய்யுங்கள் எனக் கெஞ்சி நண்பர்களிடம் காரியம் சாதிக்க நினைப்பது வருத்தமய்யா.அவர் என்னை பிளாக் செய்ய அவரது நண்பர்களை மிரட்டிப் பார்த்தார்.ம்ஹீம்.எதுவும் நடக்கவில்லை.இப்பொழுது நீங்கள் கேக் செய்யுங்கள், வடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் என்கிறீர்கள்.என்னை தடை செய்யும் அளவுக்கு நான் செய்த மாபாதகம் எதுவெனச் சொன்னால் நான் புரிந்துகொள்வேன் அய்யா.

உண்மையிலேயே நீங்கள் கவிஞர்களை மதிப்பவராக இருந்தால், நாம் கவிதை குறித்துப் பேசலாம். ஆனால்  நீங்கள் உளறுபவராக இருந்தால். அய்யா நீங்கள் விமர்சித்த கவிதைகளில் ஒன்றை எடுத்துப் போடுங்கள். அய்யா ஆம்பளைச் சிங்கமாய் நீங்கள் இருப்பது எதில் அய்யா.திட்டுவதில் மட்டுமா.


அன்பர்
அடியேன் 

- தீர்த்தமுனி