Tuesday 30 October 2012

அய்யா அமானுஷ்யபுத்திரருக்கு





போய்யா போ

நான் ஒரு கெட்டவன்
நான் பீடி பிடிப்பவன்
            நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டுப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலை பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேண்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்‌ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரச மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை பிளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
……………………………

யார் கெட்டவன்
யார் நல்லவன்

அவ்வளவுதானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.


அய்யா அமானுஷ்ய மாட்டுத்தலையரே மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இப்பொழுது நித்தமும் சுற்றிச் சுழல்வது ஆத்மநாம் கவியுலகின் அடிப்பரப்பிலய்யா. ஒரு கள்ளப் பூனையை நான் சுற்றி விளக்க  வேலை செய்ய வேண்டுமாவென யோசித்தேன்.

இந்தச் செறுப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறீர்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு

இது முதல் தொடங்கி அவர் பின்பற்றி அடியொற்றி வந்த அவர் அது குறித்து எங்காவது சொல்லியிருக்கிறாரா அமானுஷ்ய புத்திரரே.சொல்லுங்கள். நீங்கள் அவரது வெறிகொண்ட ரசிக ஆத்மா என நினைக்கிறேன்… இப்படியே நிறைய அள்ள அள்ளக் குறையாத செல்வமாய் அவரின் கவிதைகளை பொங்கி வரும் காவேரியாய் கொத்திக் குதறிக்கொண்டு போன உங்கள் ம.புவின் கவிதைத் தொனித் திருட்டைச் சொல்லிக்கொண்டு போகலாம் அய்யா.


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதிலே ஒரு நிம்மதி

என்ற வார்த்தைகளின் பின்னால் உயிர்ப்புற்று விளங்கும் கவிதையின் ஆழ்மனதைத்தான் இப்பொழுது கள்ளச் சந்தியில் வரிகளாகவும் தொனிகளாகவும் பிய்த்து பிய்த்து விற்று வருகிறார். இன்னும் சொல்லலாம் அமானுஷ்ய புத்திரரே..

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                        ஒரு கட்டிட வரைபடத்தையும்
ஒரு சாலை விவரக் குறிப்பையும்
ஒரு பெண்ணுக்கு காதல் கடிதத்தையும்
ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை

………………….
…………………

அய்யா அமானுஷ்யம்…நீங்கள் பதில் சொல்லுங்கள் அய்யா. கொந்தளித்து குமுறிய உங்களது கவிஞர் ம.பு.பதில் சொல்லுவாரோ…

எங்கோ பார்த்த முகம்
எங்கோ பார்த்த கண்கள்
எங்கோ கேட்ட ஒலி
எல்லாம் எங்கோ
எங்கெங்கோ


அய்யா அமானுஷ்யம்…புரிகிறதா அவர் என்ன மாதிரியான வரிகளையும் தொனிகளையும் கவிதையின் சரக்கையும் கைமாற்றுகிறார் என்று. அய்யா இபொழுது ஆத்மநாமை எடுத்து வாய் விட்டுப் படியுங்கள். அவரது சொற்கள் சப்தங்களாய் உங்கள் காதில் விழும்போது நீங்கள் அடையும் அனுபவத்தை சொல்லில் விளைந்த அந்த சொர்க்க அற்புதத்தை பதிலாய்ச் சொல்லுங்கள். அப்படியே ம.பு வின் செயற்கையான சத்தத்தையும் நீங்கள் காதுகளை மூடிய அனுபவத்தையும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்….

அய்யா அமானுஷ்யம் சிந்திப்பீர்!!! செயல் புரிவீர்.!!! நிந்தை மறந்து, சிந்தை மறக்காது  நித்தமும் வாசியுங்கள். புத்தம் புது பூக்கள் மலரட்டும் நித்தம் நூறு புன்னகை மலரட்டும்.

அன்புகனிந்த
தீர்த்த முனி.

No comments:

Post a Comment