Saturday 27 October 2012

முகநூல் கவிஞருகளுக்கு.







நான் கவிதை குறித்துப் பேசிய வரையில் முகநூல் கவிஞர்களின் ஓலம் பெருகிவிட்டது.  நீங்கள்கவிஞரா அய்யா  என்ற கேள்வியைக் கேட்டாலே கண்ணீரோடு பதட்டமும், நீங்கள் எழுதியது கவிதையா அய்யா என்று கேட்டால் உளறிக்குழறிப் பம்மும் நிலைக்கும் அது சென்றுவிட்டது. இவர்களிடம் பேசவே எனக்கு பரிதாபமாக இருக்கிறது.எனது விமர்சனச் சுட்டலை  கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போடுகிறேன். வணக்கொம்...கவிஞக் கண்மணிகளே....வணக்கொம்...எப்படியும் திரும்பி வர  மூணுமாசம் ஆகும்னு நினைக்கிறேன்..பொத்தகத் திருவிழாவுல கவிஞருங்க முகத்தையெல்லாம் முகநூல்ல போட்டிருக்கிற போட்டோ மாதிரி பேனா நோட்டோட இருக்குதான்னு பார்க்க ஆவலா காத்திருக்கேன்…

அய்யா வந்தனமாம் வந்தனம்
வந்த கவியெல்லாம் குந்தனும்
நான் வரும்போது வாங்கியாந்தேன்
நல்ல நல்ல விமர்சனம்
அய்யா கவிகளே
வந்தனமய்யா வந்தனம்.

வணக்கம் நமஸ்காரம்,ஸ்வாகதம்
கும்புடுறேன் சாமி.
போய்த்தொலைகிறேன்.


அன்பு கனிந்த
- தீர்த்தமுனி

No comments:

Post a Comment