Thursday 11 October 2012

அய்யா ஆதிரன் அவர்களுக்கு....





 அய்யா ஆதிரன் அவர்களுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.


நான் யாரைத் தீர்த்த முனி..

முக நூல் கவிஞர்களின் கட்டுப்பட்டித் தனமான அகந்தையை நோண்டிவிட்டதற்காக. விமர்சனம் என எதையும் தாங்கவொண்ணா அவர்களின் பலவீனத்தையும் அதன் மூலமாக அவர்களது பயங்கரவாதத்தனத்தை எடுத்துக்காட்டியதற்கும். அய்யா இவற்றையும் சில ஊளைகளையும் தீர்த்து உம் கேள்வியில் உள்ள சந்தேங்களைத்தீர்க்க வந்த, சற்றும் அதிகமாகத் தீரத் தெரிந்த தீர்த்தமுனி.

1 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்

2 நீங்கள் கவிஞரா?
ஆம்

3 அல்லது இரண்டும் கலந்த பிறவியா?
ஆம்

4 நீங்கள் வாசகரா?
ஆம்

5 நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல இந்த கேள்விகள். நான் பதில் சொல்வதற்கு.
இருந்தாலும் பரவாயில்லை அய்யா, பதில் சொல்லியிருக்கிறேன்.

6 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்.
அய்யா எழுதிய கவிதைக்கு கவிஞரே உளறுவாய்த்தனமாக கோனார் நோட்ஸ் போடுகையில் இப்படி ஆகிவிடுகிறது. ஆரம்பத்திலிருந்து கவிதையை உணரத்தோதான சில குறியீடுகளைச் சொன்னேயொழிய கவிதை இதுதான் எனச் சொல்லும் முக்காலம் உணர்ந்த முனியல்ல இந்தத் தீர்த்தமுனி.
அய்யா கவிதையை எது கவிதையாக தீர்மானிக்கிறதோ அந்த தன்மையிலிருந்தே நான் உரைகல்லை உருவாக்குகிறேன். உரைகல்லும் உராசும் பொருளும் கவிதையிலேயே இருக்கிறது. மார்கிசிய உரைகல் என்பதை பாசாங்காகக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஒரு காரணமாய் தங்களை இத்தனை கேள்விகள் கேட்கவைத்த அந்த உரைகல்லை தீப்பொறிபறக்க உரசிப்பார்க்கலாம். இல்லை அண்டாக்கா கசம் அபூக்கா குசம் என பாறாங்கல்லை உருட்டியும் பார்க்கலாம்.


கடற்கன்னி.

அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
நிர்வாணமாக அவள் நுழைந்த போது
அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன
சப்தமின்றி அவள் வெளியேறினாள் கடைசியில்
அந்தக் கதவு வழியாக
நதியைச் சென்றடையுமுன்னரே
அவள் தூய்மையாகிவிட்டாள்
மழியில் நனைந்த வெள்ளைக் கல் போல
மீண்டுமொருமுறை
மின்ன
நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
சூன்யத்திற்குள்
அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.

அய்யா இக்கவிதையை நீங்கள் விமர்சனத்துக்கு அடியில் வைத்துத் தேய்த்த உரைகல் இப்படி வாழைப்பழத் தோலாக மாறக்கூடாது. அய்யா அந்த சிறுவர்களின் கவிதைகளை சிறு கேள்வி கேட்டதற்கு, உரைகல் லோடை ஏற்றி வந்த உங்களது லாரியை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். அய்யா….அந்தக் கவிதை…அதுதான் அந்த கடல் கன்னி. அய்யா இங்கு ஒரு ஜிக்ஜாக் உள்ளது. இந்தக்கவிதையில் உள்ள ஜிக்ஜாக் ஒரு வாசகக்குசும்புக்கு விடப்பட்ட சவால் அய்யா. ஒரு கேள்வி எனத் தொடங்கி எனது விளக்கங்களைச் சொன்னதும் அவர்கள் குந்திக் குமுறி, என் இல்லக்கிழத்தி வரை கவிதையைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். அய்யா அந்த ஜிக்ஜாக்கையும் நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கவிதையின் முழுத்தலைப்பு இதுதான். கடல்கன்னி குடிகாரர்கள் கதை. கவிதையை எளிமையாக எழுதாமல் பு- நாவுக்கு பூனாப் போட்டு சூ நாவுக்கு சூனாப் போட்டு எழுதியது  தீர்த்த முனியல்ல. இன்றளவும் பொங்கிவரும் காவேரியாம் திருவாளர் பாப்லோ நெரூதா வுடையது. அய்யா இந்தக் கோமாளிக் கூத்துக்களுக்கு நெரூதாவை உடைத்துப் போடும் நீர் யார் பெருங்கோமாளியா அய்யா. சிந்திக்கும் செயலை எழுதியப் பெண்மணியைத் தேடிய நீர், சிந்த்திப்பவனின் குதத்தைக் குறிவைக்கும் கவிஞக்கண்மணியையும் தேடிப்பார்த்திக்கலாம்,. அய்யா யப்பானிய வடிவமான ஹைகூ விற்கும் வெண்பாக்கள் போல இலக்கணம் உண்டு என்கிற ராஜசுந்தர்ராஜனுக்கும் நேரடி பதில் இருக்கிறதென்றால் இருக்கிறது. கேட்டால் கொஞ்சம் வெட்கமாக இருக்கும் பரவாயில்லையா… அய்யா வெண்பா ஒரு கற்றுக்கொள்ளும் திட்டம் என்றால் அந்த வெண்பாவுக்கும், பொங்கலுக்கும் உரைகல் இலக்கணம் என்றால் கவிதைக்கு அங்கு என்ன உரைகல் என்று  கேட்டிருக்கலாம். பெரியவர். ஏதோ ஹைகூக்கு இலக்கணம் இருக்கிறதென்றால் இங்குள்ள கவிதைகளுக்கு இலக்கணம் எதுவய்யா. நேரடியாக உங்களுக்குப் பதில் தந்துவிட்டேன். நீங்கள் அங்கு சென்று உசாவலாம்.

//படிக்கிற கவிதையின் படைப்பாளியின் அனுபவத்தை ஒரு வாசகர் நேரடியாக பெறும்பொழுது அவருக்கு கவிதை மீதான விமர்சனம் தேவையற்றுப் போகிறது.//

 அய்யா இது அப்படியா அய்யா. இல்லை அய்யா இது அண்டப்புளுகுணிகள் ஆகாசப் புளுகுணிகள் தாங்கள் மட்டுமே புரிந்துகொண்டதாக உளறிவைத்த வேலை. இன்னும் சொன்னால் பெருந்திட்டமய்யா பெருந்திட்டம்.

அய்யா…கவிதைக்கூறில் ஏகப்பட்ட நுழைபுலன்கள் உள்ளதய்யா கவிதையை அணுக நாம் கொள்ல வேண்டியதென பல உள்ளதய்யா. ஏனென்றால் கவிதை தன்னளவில் பெரும்பேறு கொண்டதல்லவா,

அய்யா….கவிதையை அணுக நாம் கைக்கொள்ள வேண்டிய முறைகளாவன…

விளக்க முறை
ஒப்பீடு
மதீப்பீடு
ரசனைமுறை
பாராட்டு முறை
முடிபுமுறை
விதிமுறை
படைப்பு நிலை
பகுப்பு நிலை

இவைகளோடு
அதை ஆய்ந்தகன்று உள் செல்ல
சமுக வய
இன்னும் வரலாற்றிய
உளவியல் முறையிலான அதற்கடுத்து
மொழியியல் அணுகுமுறையோடு
கவிதையின் உருவவியலோடு,
அதன் அமைப்பியலோடு, பின்னதாக வந்த பின்னை அமைப்பியலோடு, பின் நவீனத்தோடு
அறநெறிச்சாரத்தின் மையத்தோடு
தொல்படிவ அணுகுமுறையோடு
இலக்கியவகையியலோடு
இன்னும்
தத்துவத்தோடு
இப்பொழுது நொங்கெடுத்து சில பலரைக்
கிண்டிக் கிழங்கெடுக்க வந்த
சமகால தலித் மரபோடு

உங்களது பாணியில் காமெடியாகச் சொன்னால் மார்க்சிய இயங்கியலோடும் உரைத்துப் பொருள் கூறலாம். ( இங்கேயும் சிக்கல் உள்ளது. எச்சரிக்கை.)

மாபெரும் முனிகளான தெரிதாவும் பூக்கோவும் சசூரும் பைத்தியங்கள் இல்லை அய்யா, மொழிக்கு வைத்தியம் பார்க்க வராது வந்த மாமுனிகள்..

பாட்டு நினைவுக்கு வருகிறதா
ஒன் டூ த்ரீ…ஸ்டார்ட்…

பிரெஞ்சு மலை மாமுனியே தெரிதா ய்யா
சார்த்தரின் குணங்க்காக்கும் பூக்கோய்யா
நீட்ஷேயா..யீய்யா
பிரெஞ் மலை மாமுனியே சார்த்தரையா…

பூக்கோவின் குங்குமம்
தெரிதாவின் சந்தனம்
ஜகஜகஜகஜகஜகஜக…

சார்த்தரின் இருத்தலில்
தெரிதாவின் சம்பட்டியில்

அய்யா நினது திருவடி சரண்புகவே
மார்க்சய்யா
அய்யா…


அந்தக பாப்லோ நெரூதா கவிதையை மொழிபெயர்த்ததில் எந்தச் சிக்கலும் இல்லை அதையும் கண்டுபிடியுங்கள். விளக்கம் கேட்டு நீங்கள் வெட்டிய அனுப்பிய பகுதிகள் எல்லாம் இதை விளக்கி எழுதியபோது வந்ததுதான் இது…இன்னும் விளக்கித்தான் உங்களுக்குப் புரியவேண்டுமெனில். நீங்கள் கவிதை எழுதாமல் கவிதைகளைப் படிப்பது மூன்ரு வேளைக்கு ஒரு வேளை உத்தமம்.
பெயரைக் கேட்டு ஒரு கேள்வி. அய்யா பெயர் எப்பொழுதும் பெரும் பிரச்சினை அய்யா. அதில் வேறொன்றுமில்லை விமர்சனம் எழுதிவைத்தால், இவன் எனக்கு மாமன், இவன் எனக்குச் சித்தப்பா, இவன் எனக்கு ஒன்றுவிட்ட பெரியப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை மகன் எனச்சொல்லி அந்த உரைகல்லை உடைத்து கவிதையைப் பதம் பார்த்துவிடுகிறார்கள். அதனால் என்னை முன்வைப்பதில் சிக்கல்கள் பல உள்ளது. ஏற்கனவே நான் கேட்டுச் சலித்து பதில் வராத கேள்விகள் கீழே அய்யா..

1 சிறு கேள்வி கேட்டாலே கவிஞக் கண்மணிகள் தொடை வழியே குதம் வழியே வழியவிடுவது எது.?

2 விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் கழிந்து வைக்கும் வார்த்தைகள் எந்த மணத்தோடு ஒத்துப் போகிறது.?

3 சக கவிஞருக்கு வக்காலத்து வாங்க வருபவரும் ஒரு கவிஞராய் இருப்பது ஏன்?

விமர்சனத்தில் எங்கு பிழையுள்ளது எனக் கேட்காத தாங்கள் என்னிடம் கவிதைக்கு விளக்கம் கேட்டதே எனக்கு இப்பொழுது பெரிய விசயமாய் இருக்கிறது. நீங்களாவது என் குடும்ப நலத்தை கேட்காமல் இருந்தீர்களே.அந்தளவுக்கு விஷேசம்.

அய்யா எனது தளச்செயல்பாடுகளை வெட்கப்பட்டு மூடிவிட்டேன். முடிந்தால், உங்களுக்குத் தளமிருந்தால்.. இதைப் பகிரலாம்.
தொடர்ந்து உரையோடுவோம் ஆதிரரே.

பூக்கட்டும் திசையெங்கும் மலர்கள்
வீசட்டும் வாசம் எங்கெங்கும்.

அய்யா வணக்கம்….
அன்பிற்குரிய மனங்கனிந்த
-       தீர்த்த முனி


No comments:

Post a Comment